.

Pages

Sunday, May 26, 2013

சாதனை மனிதர் அதிரை மொய்தீன் அப்துல் காதர் அவர்களோடு ஒரு நேர்காணல் [ காணொளி ] !

தண்ணீரில் பல மணி நேரங்கள் மிதந்து உலக சாதனையாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிரை ஆலடித் தெருவைச் சார்ந்த 'புளியங்கொட்டை அப்பா' என அன்புடன் அனைவராலும் அழைக்கப்பட்ட மர்ஹூம் முஹம்மது அபூபக்கர் அவர்கள் தனது முதிய வயதிலும் சாதனைகள் பல புரிந்து  அதிரைக்கு பெருமை சேர்த்துத் தந்தவர். [ இது குறித்து விரிவாக கடந்த [ 15-05-2013 ] அன்று தளத்தில் சாதனை செய்தியாக வெளியிட்டிருந்தோம் ]
உலக சாதனை படைத்த மர்ஹூம் அதிரை முஹம்மது அபூபக்கர் அவர்களின் வரிசையில் அவரது மகன் மொய்தீன் அப்துல் காதர் அவர்களும் அமைதியாக இருந்து அனைவரையும் வியக்கவைக்கும் அளவிற்கு ஒரு சாதனை படைத்து வருகிறார். கடந்த பத்து வருடங்களாக சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் தனது கையில் மாட்டியுள்ள கைக்கடிகாரத்தை கையிலிருந்து கலாட்டாமல் இருக்கிறார்.

இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறையேனும் கடிகாரத்தில் இருக்கிற பேட்டரியை மாற்றம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஒரு பக்கம் இருந்தாலும், அதெப்படி கடிகாரத்தில் பேட்டரி கூட  கழட்டாமல் கையிலேயே மாட்டிருக்கிறார் !? என்று நமக்கு வியப்பாக இருந்தாலும் அவர் கூறியவற்றை நேரடியாக நாம் காணும் போது அவர் கூறுவது அனைத்தும் உண்மைதான் என அறிய முடிந்தது.

சாதனை செய்ய துடிக்கும் இந்த அதிசய மனிதர் அதிரை மொய்தீன் அப்துல் காதர் அவர்களுக்கு 'அதிரை நியூஸ்' சார்பாக பாராட்டுதலை அன்புடன் தெரிவித்துக்கொண்டு அவரிடம் ஒரு நேர்காணலையும் பெற்றோம்.

11 comments:

  1. பார்ப்பதற்குச் சாதாரணமாக இருக்கலாம்; ஆனால், அன்புச்சகோதரர், அதிரை முஹைதீன் அப்துல்காதிர் அவர்களின் இப்படிப்பட்ட செயல்பாடு, எதிலும் ஓர் ஈடுபாடு வேண்டும்; வைராக்கியம் என்னும் உறுதிபாடு வேண்டும் என்பதையே காட்டும்.

    இன்ஷா அல்லாஹ் அவரின் இறுதிகாலம் வரை அவரின் எண்ணம் ஈடேறும்!

    ReplyDelete
  2. சாதிக்க வாழ்த்துக்கள்!
    இவர்களின் சகோதரர் மர்ஹூம் ராஜிக் அவர்கள் சுமார் ஏழாண்டுகள் இங்லேன்டில் இருந்துவிட்டு (3 வருசத்துக்கு முன்) ஊர் போகும்போது அதிரையை அடையும்முன்னே விபத்தில் இறந்து அதிரை மண்ணில் அடங்கப்பட்டதே மிச்சம். அன்னாரை இந்நேரம் நினைத்து நெஞ்சம் உருகுகிறது. அல்லாஹ் அன்னாரை பொறுந்திக்கொள்வானாக ஆமீன்.

    ReplyDelete
  3. இன்னும் பல சாதனைகள் புரிந்து அதிரைக்கு பெருமை சேர்க்க என் மனநிறைவான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. சாதனை செய்ய துடிக்கும் இந்த அதிசய மனிதர் காக்கா மொய்தீன் அப்துல் காதர் அவர்கள் வெற்றி பெற என் துவாவும் வாழ்த்தும்....

    ReplyDelete
  5. சாதனை செய்ய துடிக்கும் காக்கா மொய்தீன் அப்துல் காதர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இன்னும் பல சாதனைகள் புரிந்து அதிரைக்கு பெருமை சேர்க்க எங்கள் மனநிறைவான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. மொய்தீன் அப்துல் காதர் காக்கா அவர்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் சாதனை உலகறிய என்னுடைய துவாவும் என்னுடைய வாழ்த்துக்களும்.

    இன்னும் இது போன்று பல சாதனை படைத்து நமது ஊருக்கும் தாய் மண்ணுக்கும் பெருமை சேர்க்க முயற்சி செய்யவும்.

    ReplyDelete
  8. பதிவுக்கு நன்றி.

    இன்னும் இது போன்று பல சாதனை படைத்து நமது ஊருக்கும் தாய் மண்ணுக்கும் பெருமை சேர்க்க முயற்சி செய்யவும்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  9. இன்னும் இது போன்று பல சாதனை படைத்து நமது ஊருக்கும் தாய் மண்ணுக்கும் பெருமை சேர்க்க முயற்சி செய்யவும்.

    எனக்கு ஒரு சின்ன சந்தேகம் கை இருந்த வாட்ச்சியில் பேட்டரி போய் விட்டால் அந்த வாட்ச்சியை கழற்றி விட்டு தானே பேட்டரி போட முடியும். வாட்சியை கழட்டாமல் எப்படி பேட்டரி போட முடியும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.