.

Pages

Tuesday, May 7, 2013

அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொழிற்ச்சங்கப் பிரிவு சார்பாக புதிய தண்ணீர் பந்தல் திறப்பு !

அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொழிற்சங்கப் பிரிவு [ SDTU ] ஈசிஆர் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக இன்று [ 07-05-2013 ] காலை 11 மணிக்கு பொதுமக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக பிஸ்மி மெடிக்கல் அருகே ஈசிஆர் சாலையின் முக்கிய பகுதியில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு தினமும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

SDTU யின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் முஹம்மது அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தொழில் அதிபர் ஹாஜா அலாவுதீன் அவர்களால் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. SDPI கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவர் முஹம்மது இலியாஸ் மற்றும் SDPI கட்சியின் தொழிற்சங்கப் பிரிவின் [ SDTU ] கெளரவத் தலைவர் முஹம்மது சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் நகர SDPI கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பெரும் திரளாக கலந்துகொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் தேடிச்சென்று முதல் நாளாகிய இன்று மோர் பரிமாறினார்கள்.





2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. நல்லதோர் முயற்ச்சி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.