.

Pages

Tuesday, May 14, 2013

கடற்கரைத்தெருவில் ADT நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழா !

இன்று [ 14-05-2013 ] இரவு 7 மணியளவில் அதிரை கடற்கரைத்தெரு ஜும்மாப் பள்ளி எதிரே அமைந்துள்ள மைதானத்தில் அதிரை தாருத் தவ்ஹீதின் [ADT] சார்பாக மாபெரும்  பொதுக்கூட்டம் மற்றும் ADTயின் அங்கமாகிய அதிரை இஸ்லாமிக் மிஷன் [ AIM ] நடத்திய கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழா இனிதே நடைபெற்றது.





கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக சிறுவர் சிறுமிகளுக்கான மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றன. இதில் பெரும்பாலான சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை நிரூபித்தனர். பயிற்சியில் கலந்து கொண்டு சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்ட காயல்பட்டிணம் அன்னை ஆயிஷா சித்தீக்கியா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வர் மவ்லவி அப்துல் மஜீத் மஹ்லரி அவர்கள் 'இஸ்லாமிய கல்வியின் அவசியம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெரும்திரளாக கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பெண்களுக்கு என தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சிகுரிய ஏற்பாடுகளை அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக அதன் நிர்வாகிகள் சிறப்பாக செய்துருந்தனர்.

4 comments:

  1. அதிரை தாருத் தவ்ஹீத் [ADT] மற்றும் இஸ்லாமிக் மிஷன் [ AIM ] பணிகள் சிறக்க வல்ல இறைவனிடம் துவா செய்கிறேன்.........

    ReplyDelete
  2. தாங்களின் மார்க்கப்பணி சிறப்புடன் நடக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அதிரை தாருத் தவ்ஹீத் மற்றும் அதிரை இஸ்லாமிக் மிஷன் பணிகள் சிறக்க வல்ல இறைவனிடம் துவா செய்கிறேன்....

    தாங்களின் மார்க்கப்பணி சிறப்புடன் நடக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கோடைக்காலம் வீண் விரயம் செய்யாமல் இது போன்று மார்க்க சொற்பழிவு மார்க்க அறிஉறை போன்ற நிகழ்ச்சிகள் நடத்திய அதிரை தாருத் தவ்ஹீத் [ADT] மற்றும் இஸ்லாமிக் மிஷன் [ AIM அமைப்புகளுக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.