.

Pages

Sunday, May 12, 2013

அதிரைப் பொருட்காட்சியின் நிறைவு விழா !

அதிரையில் வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் [ ATCO ] சார்பில் கடந்த [28-04-2013 ] அன்று முதல் பொருட்காட்சியை நடத்தி வருகின்றனர். இதில் அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்கள் குடும்பத்தினருடன் வருகைதந்து பார்வையிட்டுச் சென்றனர்.

கடந்த 15 நாட்களாக நடைபெற்ற பொருட்காட்சி இன்றைய இறுதி நாளன்று 3000 த்துக்கும் மேற்பட்டோர் பங்களிப்புடன் இனிதே நிறைவுபெற்றது. இந்த பொருட்காட்சி சிறப்பாக நடந்திட அனைத்து விதத்திலும் ஒத்துழைத்து ஆலோசனை வழங்கியோருக்கும் மற்றும் பொருட்காட்சியில் பங்கெடுத்துக் கொண்டோருக்கும் இதற்கும் மேலாக பொருட்காட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த ஏற்பாட்டாளருக்கும் என அனைவருக்கும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் வழங்கி மேடையில் கெளரவிக்கப்பட்டது.










7 comments:

  1. வெற்றிகரமா அதிரை பொருட்காட்சியை நடத்திய நிர்வாகிகள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுகள் வாழ்த்துகள் !!!!!!!

    ReplyDelete
  2. வெற்றிகரமா அதிரை பொருட்காட்சியை நடத்திய நிர்வாகிகள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுகள் வாழ்த்துகள் !!!!!!!

    ReplyDelete
  3. இந்த பொருட்காட்ச்சை எல்லோருடைய ஆதர்வோடும் நடத்தி முடித்த நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.இதுபோல் அடுத்த வருடமும் சிறப்பாக நடத்த என்னுடைய வாழ்த்துக்கள்.

    குறிப்பு பெண்களுக்கன தனி நேரம் ஓதிக்கினால் நல்லது அடுத்த வருடம்

    ReplyDelete
  4. வெற்றிகரமா அதிரை பொருட்காட்சியை நடத்திய நிர்வாகிகள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுகள் வாழ்த்துகள் !!!!!!!

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    புகைப்படங்கள் படு ஜோர். புகைப்படங்களில் இருக்கும் வண்ணங்கள் மிகவும் அருமை, புகைப்படத்தில் ஒளிர்கின்ற ஒளிக்கற்றைகள் மிகவும் அழகாக இருக்குது, இந்த ஒளிக்கற்றையின் பின்னணியில் ஆகாயத்தின் கருமை ஒரு படி மேலே.

    வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  6. இவ்வர்த்தக பொருட்காட்சியை நமதூருக்கு அறிமுகம் செய்து சிறப்புடன் நடத்திட்ட நிர்வாகிகள் மற்றும் குழுமினர்களுக்கு வாழ்த்துக்கள்.

    இனிவரும் காலங்களில் நடக்கவிருக்கும் இத்தகைய பொருட்காட்சியில் அனாச்சாரங்களை களைந்து அனைத்துக்குறைபாடுகளையும் சரிசெய்து இன்னும் சிறப்பாக நடந்திட வேண்டும்.

    ReplyDelete
  7. வெற்றிகரமாக முடித்தார்கள் என்று கருத்திடும் அனைவருக்கும் ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்

    நேற்று என் நண்பர்களுடன் அதிரை பொருட்காட்சியை காண சென்றேன் கடைகள் நிரம்பி வழிந்தன என்று அறிவிக்கப்பட்டன
    சென்று பார்த்ததும் ஓரிரு கடைகள் தவிர அனைத்து கடைகளும் காலி செய்யப்பட்டிருந்தது.

    மறுபக்கம் மேடையில் பாராட்டுவிழா அதை காண ஒரு சில பேர் காண முடிந்தது அதிரை நியூஸ் அதையும் படமிட்டு காண்பித்தால் நன்றாக இருந்திருக்கும்.

    அதில் ஒருவர் கூறிய தகவல் இனி ஒவ்வொரு ஆண்டிலும் இதுபோன்றொரு பொருட்காட்சி நடத்தவிருப்பதாக, நடத்தலாம் தப்பேயில்லை அனால் ஒவ்வொரு வக்த்துக்கும் (அஸர் முதல் இஷா வரை) பாங்கு ஒலி கேட்டதும் பொருட்காட்சியில் அறிவிக்கப்படும் அறிவிப்பினை சற்று நிறுத்தி பாங்கு க்கு மரியாதை செலுத்த வேண்டும். மேலும் அருகில் இருக்கும் பள்ளிக்கு தொழுகையில் இடையூறு செய்யாத வண்ணம் பொருட்காட்சி தொடர வாழ்த்துக்கள்.

    இறுதிகட்டத்தில் தாங்கள் நடத்திய கலைநிகழ்ச்சியை நிறுத்தியது வரவேற்க்கத்தக்கது இதுபோன்று வரும் ஆண்டில் அநாகரிகமான ஆனாச்சரங்கள் அரங்கேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நிர்வாகத்தின் கடமையாகும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.