.

Pages

Tuesday, May 21, 2013

பிலால் நகர் இரயில்வே கேட் திறக்கப்பட்டது : சொன்னதை செய்த TR பாலு [ காணொளி ] !

அதிரை பிலால் நகர் அருகே உள்ள ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள திறக்கப்படாமல் மூடியே கிடக்கும் இரயில்வே கேட்டினால் அதன் அருகே அமைந்துள்ள அபாயகரமான வளைவைக் கொண்ட பழைய சாலையில் வாகனங்கள் சென்று வந்தன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் ஏற்படும். இவற்றை தடுக்கும் நோக்கில் இந்த மூடிய  ரயில்வே கேட் திறப்பது எப்போது ? என்ற பொதுமக்களின் கோரிக்கையை இந்தப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்களிடமும், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளிடம் அவ்வப்போது தெரியப்படுத்தி வந்தனர்.

சேதுசமுத்திர திட்ட விழிப்புணர்ச்சி மாநாடு குறித்து விளக்கம் அளிப்பதற்காக தஞ்சை மாவட்டம் அதிரைக்கு கடந்த [ 15-05-2013 ] அன்று முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு வந்தார். அப்போது அவருக்கு அதிரை நகர வர்த்தக சங்கம் சார்பில் மேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் VT. தஹலா மரைக்காயர் அவர்களால் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன் பின்னர் பிலால் நகர் அருகே திறக்கப்படாமல் உள்ள இரயில்வே கேட்டினால் பல விபத்துக்கள் நடக்கின்றன என்பதையும், இதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து டி.ஆர்.பாலுவின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

அன்றைய தினமே விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல் அதற்கு உடனே இரயில்வே கேட்டை திறப்பதற்குரிய ஏற்பாடு செய்து தருகிறேன் என உறுதி அளித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.






அதன் தொடர்ச்சியாக இன்று [ 21-05-2013 ] பகல் 1 மணியளவில் திருவாரூரிலிருந்து வருகை தந்த இரயில்வே கோட்ட பொறியாளர் அருள் மொழி அவர்கள் ஆய்வை மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல், JCP இயந்திரத்தைக் கொண்டு சாலையில் அமைந்துள்ள வேகத்தடைகள், அபாயகரமான வளைவை எச்சரிக்கும் அறிவிப்பு பலகைகள், முட்புதர்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்திவிட்டு மூடிய கேட்டுகளை வாகன போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது.

அதிரை நகர வர்த்தக சங்கம் சார்பில் மேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் VT. தஹலா மரைக்காயர் அவர்கள் இரயில்வே அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு வேண்டிய உதவிகளை உடனிருந்து உதவினார்.

டி.ஆர்.பாலுவின் கவனத்துக்கு எடுத்துச்சென்று மூடிக்கிடந்த இரயில்வே கேட்டை திறப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த  VT. தஹலா மரைக்காயர் அவர்களிடம் 'அதிரை நியூஸ்' சார்பாக அணுகி அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

8 comments:

  1. செய்தி பதிந்து அறியத்தந்தமைக்கு நன்றி.

    இந்த ரயில்வே கேட்டை துரிதமாய் திறந்து மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க உதவிய முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு அவர்களுக்கும்,இந்த வேலையை துரிதப்படுத்திய மேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் VT. தஹலா மரைக்காயர் அவர்களுக்கும் மற்றும் இதற்காக பாடுபட்ட அனைவர்களுக்கும். மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. இந்த ரயில்வே கேட்டை துரிதமாய் திறந்து மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க முயற்சி செய்து வெற்றியும் பெற்ற மேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் VT. தஹலா மரைக்காயர் அவர்களுக்கும் அதற்க்கு ஆணை செய்த மரியாதை குறிய திரு.டி ஆர் . பாலூ அவர்கள்ளுக்கும் மற்றும் இதற்காக பாடுபட்ட அனைவர்களுக்கும் மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள், சரி நம்ம MLA. MP எல்லாம் என்ன செய்தார்கள்?

    ReplyDelete
  4. சொன்னது நடந்தது மிக்க மகிழ்ச்சி வாகனகளில் செல்பவர்கள் நிதனமாக செல்லவேண்டும்.

    இதற்க்கு முயற்சி செய்த அனைவர்க்கும் இதனை உடனை நிரவேற்றி தந்த முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான மரியாதை குறிய திரு.டி ஆர் . பாலூ அவர்கள்ளுக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. இதற்காக பாடுபட்ட அனைவர்களுக்கும். மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இந்த ரயில்வே கேட்டை துரிதமாய் திறந்து மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க முயற்சி செய்து வெற்றியும் பெற்ற மேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் VT. தஹலா மரைக்காயர் அவர்களுக்கும் அதற்க்கு ஆணை செய்த மரியாதை குறிய திரு.டி ஆர் . பாலூ அவர்கள்ளுக்கும் மற்றும் இதற்காக பாடுபட்ட அனைவர்களுக்கும் மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இந்த ரயில்வே கேட்டை துரிதமாய் திறந்து மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க முயற்சி செய்து வெற்றியும் பெற்ற மேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் VT. தஹலா மரைக்காயர் அவர்களுக்கும் அதற்க்கு ஆணை செய்த மரியாதை குறிய திரு.டி ஆர் . பாலூ அவர்கள்ளுக்கும் மற்றும் இதற்காக பாடுபட்ட அனைவர்களுக்கும் மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இதற்காக பாடுபட்ட சேக்கனா M. நிஜாம் தகவலுக்கும் நன்றி. அவர்கள்ளுக்குக நன்றியுடன் வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.