.

Pages

Saturday, May 11, 2013

அதிரை சி.எம்.பி லைனில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் ‘டமார்’ என்ற சத்தத்துடன் தீ பிடித்து எரிந்தது [ காணொளி ]!

அதிரை சி.எம்.பி லைனில் அமைந்துள்ள குடியிருப்புகள் பகுதிகளுக்கும், கல்வி நிறுவனம், வழிபாட்டுத்தலங்கள், விவசாய நிலங்கள் ஆகியவற்றிற்கு VKM ஸ்டோர் எதிரே இருக்கின்ற டிரான்ஸ்பார்மர் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தன.



கூடுதல் இணைப்பின் காரணமாக இந்த டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி பழுதடைந்தது விடும். மின்சார ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் பழுதடைந்தது விடுகிறது. இதனால் இந்தப்பகுதியில் வாழும் பொதுமக்கள் வர்த்தகர்கள், மாணவ மாணவிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வந்தனர்.

இன்று [ 11-05-2013 ] பகல் 2.30 மணியளவில்‘டமார்’ என்ற சத்தத்துடன் டிரான்ஸ்பார்மரில் தீ பிடித்து மளமளவென பற்றி எரிந்தது. இதனால் இந்தபகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் காணப்பட்டனர்.

துரித நடவடிக்கையாக உடன் களத்தில் இறங்கிய அப்பகுதி இளைஞர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். மேலும் அதிரை மின்சார வாரியத்திற்கும் தகவல் தெரியப்படுத்தினர். இதனால் இப்பகுதி முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டன.

நன்றி : 
ஆஷிக் அஹமது, 
அஹமது மொய்தீன், 
KMA ஜமால் முஹம்மது

2 comments:

  1. செய்தியை அதிரடியாய் பதிந்து அறியத்தந்த அதிரை நியூஸிற்கு நன்றி.

    சானாவயல் சண்முகம் டீ ஸ்டால் அருகில் உள்ள பழுதடைந்த போஸ்ட் மரம் இன்னும் மாற்றாமல் உள்ளது. அசம்பாவிதங்கள் நிகழும் முன் மாற்றியாக வேண்டும் முயற்ச்சிப்பார்களா..???

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    ஒரு வழியா இரவு 9.00மணிக்கு சப்ளை கொடுக்கப்பட்டது.

    இதைப்பற்றி விளக்கமாக ஒரு பதிவாக எழுதுவேன்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.