.

Pages

Thursday, May 16, 2013

மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப்பெற்ற 'மணிச்சுடர்' அதிரை நிருபர் சாகுல் ஹமீது !

அதிரை நடுத்தெருவைச் சார்ந்தவர் அஜ்மீர் ஸ்டோர் A. சாகுல் ஹமீது. சமூக ஆர்வலரான இவர் 'மணிச்சுடர்' இதழின் அதிரை நிருபராகவும், 'அதிரை நியூஸ்' வலைதளத்தின் முதன்மை பங்களிப்பாளராகவும் இருக்கிறார்.
இவர் கடந்த ஆறு ஆண்டுகளில் 23 தடவை இரத்த தானம் செய்து சாதனை புரிந்துள்ளார். மொத்தம் 8 லிட்டர் 50 மில்லி கிராம் இரத்தம் வழங்கியுள்ளார். இந்த குருதிக்கொடையைப் பாராட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் அவர்கள், தஞ்சை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்த தான விழாவில் சான்றிதல் வழங்கி பாராட்டினார் என்ற மகிழ்ச்சியான செய்தியை அறிவிப்பதில் மகிழ்கின்றோம்.
பிறருக்கு முன் மாதிரியாக மென்மேலும் இரத்த தானம் செய்து சமூக சேவையை தொடர்ந்து செய்திட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் 'அதிரை நியூஸ்' சார்பாக A. சாகுல் ஹமீது அவர்களுக்கு வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

 அதிரை நியூஸ் குழு

10 comments:

  1. மாஷா அல்லாஹ் !

    இரத்த தானத்தில் இஸ்லாமியர்கள் சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிருபித்து உள்ளீர்கள்.

    தொடர்ந்து சமூக சேவையை ஆற்றிட என் வாழ்த்தும் - துஆவும்

    ReplyDelete
  2. A.சாகுல் ஹமீது அவர்களின் இந்த மகத்தான சமூக சேவை பாராட்டுக்குரியவை.

    இந்த சமூக சேவையை தொடர்ந்து தாங்கள் செய்திட என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ்
    மணிசுடர் இதழின் செய்தியாளராகவும் சமூக சேவையாளராகவும் பணியாற்றிவரும் சாகுல் ஹமீது காக்காவின் பணி இறைவன் கிருபையால் மென்மேலும் தொடரவும் வாழ்த்துகிறேன்
    --------------
    இம்ரான்.M.யூஸுப்

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    தம்பி சாகுல் ஹமீது அவர்களின் தந்தை மற்றும் சின்னவாப்பா எல்லோரும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள், என்னைப்பொருத்தமட்டில் அருமையானவர்கள், அதேநேரம் தம்பி சாகுல்ஹமீத் அவர்களின் இந்த மகத்தான சேவையானது மிகவும் பாராட்டத்தக்கது.

    வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ் ..!

    நலமுடன் வளமாக வாழ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. என் உறவினர் சாவண்ணா என்று செல்லமாக அழைக்கும் சாகுல் ஹமீதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. குருதிக்கொடையாளருக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. மாஷா அல்லாஹ் ..!

    நலமுடன் வளமாக வாழ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. பிரதிபலன் எதிர்பாராது செய்யும் இத்தகைய மகத்தான சேவைகள் ஊக்குவிக்கப்பட வேண்டியது அவசியம். நண்பர் சாவண்ணாவின் தன்னார்வ சேவைகள் தொடரட்டும். வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. இரத்த கொடைவள்ளல் சாகுல் ஹமீதுக்கு எனது பாராட்டுக்கள்.

    இரத்த தானம் என்பது ஒரு புண்ணியம் அது எல்லோருக்கும் இந்த மாதிரியான ஆர்வம் வரணும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.