.

Pages

Monday, May 13, 2013

அதிரை பேரூராட்சி அலுவலர்களின் காலதாமதத்தால் துப்புரவுப் பணிகள் பாதிப்பு !

அதிரை பேரூராட்சி அலுவலர்களின் காலதாமதத்தால் இன்று நடைபெற உள்ள துப்புரவுப் பணிகள் பெரிதும் பாதிப்படைந்தது.


தினமும் காலை நேரத்தில் துப்புரவு தொழிலாளர்களின் வருகை குறித்த கணக்கெடுப்பும் அவர்களது பணிகள் குறித்த விவரங்கள் தருவதும் வழக்கமாக பின்பற்றப்படுகிறது.

இன்று காலை பேரூராட்சியின் அலுவலர்கள் அலுவலகத்தில் இல்லாத காரணத்தால் தினமும் காலை 6 மணிக்கு நடைபெற வேண்டிய பணிகள் அனைத்தும் முடங்கின. துப்புரவு தொழிலாளர்கள் பணிகளுக்கு புறப்பட்டுச் செல்லாமல் பேரூராட்சியின் நுழைவாயிலில் காத்திருந்தனர்.

இதுபோல் தினமும் காலதாமத்துடன் துப்புரவு பணிகளை மேற்கொண்டால் நகரில் குப்பைக் கூளங்கள் அதிகமாகி சுகாதாரக்கேடுகள் ஏற்படும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அதிரை பேரூராட்சியில் ஏற்கனவே துப்பரவு ஊழியர்கள் பெரும் பற்றாக்குறையுடன் காணப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருந்தாலும், காலதாமதத்துடன் ஆரம்பிக்கும் இவர்களின் பணிகளால் மேலும் குப்பைக் கூளங்கள் நகரில் மலைபோல் குவிந்துவிடும் என்பது மட்டும் உண்மை ! சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு துரிதமாக செயல்பட வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இவர்களின் பணிகளை முடுக்கி விடுவது மக்கள் பிரதிநிதிகளின் தலையாயக் கடமைகளில் ஒன்று.

2 comments:

  1. வெளியில் கஷ்டப்பட்டு குப்பைகளை அகற்றும் அவர்களே சரியான நேரத்தில் பணிக்கு வந்த பிறகு

    அலுவலகத்தில் ஹாயாக அமர்ந்து பணி செய்யும் இவர்கள் தாமதமாக பணிக்கு வருகிறார்களா..நல்ல நியாயம்ப்பா

    வருவிங்க நல்லா வருவிங்க பா

    ReplyDelete
  2. துப்புரவு தொழிலாளர்கள் ஆகட்டும் அலுவலர்கள் ஆகட்டும் யாராக இருந்தாலும் பொறுப்புடன் செயல்பட்டால்தான் ஊரும் சுத்தமாகும் உள்ளமும் சுத்தமாக இருக்கும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.