தினமும் காலை நேரத்தில் துப்புரவு தொழிலாளர்களின் வருகை குறித்த கணக்கெடுப்பும் அவர்களது பணிகள் குறித்த விவரங்கள் தருவதும் வழக்கமாக பின்பற்றப்படுகிறது.
இன்று காலை பேரூராட்சியின் அலுவலர்கள் அலுவலகத்தில் இல்லாத காரணத்தால் தினமும் காலை 6 மணிக்கு நடைபெற வேண்டிய பணிகள் அனைத்தும் முடங்கின. துப்புரவு தொழிலாளர்கள் பணிகளுக்கு புறப்பட்டுச் செல்லாமல் பேரூராட்சியின் நுழைவாயிலில் காத்திருந்தனர்.
இதுபோல் தினமும் காலதாமத்துடன் துப்புரவு பணிகளை மேற்கொண்டால் நகரில் குப்பைக் கூளங்கள் அதிகமாகி சுகாதாரக்கேடுகள் ஏற்படும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அதிரை பேரூராட்சியில் ஏற்கனவே துப்பரவு ஊழியர்கள் பெரும் பற்றாக்குறையுடன் காணப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருந்தாலும், காலதாமதத்துடன் ஆரம்பிக்கும் இவர்களின் பணிகளால் மேலும் குப்பைக் கூளங்கள் நகரில் மலைபோல் குவிந்துவிடும் என்பது மட்டும் உண்மை ! சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு துரிதமாக செயல்பட வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இவர்களின் பணிகளை முடுக்கி விடுவது மக்கள் பிரதிநிதிகளின் தலையாயக் கடமைகளில் ஒன்று.
வெளியில் கஷ்டப்பட்டு குப்பைகளை அகற்றும் அவர்களே சரியான நேரத்தில் பணிக்கு வந்த பிறகு
ReplyDeleteஅலுவலகத்தில் ஹாயாக அமர்ந்து பணி செய்யும் இவர்கள் தாமதமாக பணிக்கு வருகிறார்களா..நல்ல நியாயம்ப்பா
வருவிங்க நல்லா வருவிங்க பா
துப்புரவு தொழிலாளர்கள் ஆகட்டும் அலுவலர்கள் ஆகட்டும் யாராக இருந்தாலும் பொறுப்புடன் செயல்பட்டால்தான் ஊரும் சுத்தமாகும் உள்ளமும் சுத்தமாக இருக்கும்.
ReplyDelete