.

Pages

Saturday, May 4, 2013

அதிரையில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் !

அதிரை பேருந்து நிலையம் அருகே தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் இன்று [ 04-05-2013 ] மாலை 7 மணியளவில் நடைபெற்றது.

இதில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநிலத்தலைவர் கே. எம். ஷரீப் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். முன்னதாக தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் AJ. ஜியாவுதீன் மற்றும் அதிரை நகரத் தலைவர் B. உமர் தம்பி மரைக்காயர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். 

இந்தப் பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக இன்று காலை தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக இரத்த தான முகாம் அதிரை அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் ஏராளமான  தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இரத்த தானம் செய்தனர். அதைத் தொடர்ந்து கட்சியின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.