.

Pages

Wednesday, May 22, 2013

TR பாலுவை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்த அதிரையர்கள் [ காணொளி ]

அதிரை பிலால் நகர் அருகே உள்ள ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள திறக்கப்படாமல் மூடியே கிடக்கும் இரயில்வே கேட்டினால் அதன் அருகே அமைந்துள்ள அபாயகரமான வளைவைக் கொண்ட பழைய சாலையில் வாகனங்கள் சென்று வந்தன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் ஏற்படும். இவற்றை தடுக்கும் நோக்கில் இந்த மூடிய  ரயில்வே கேட் திறப்பது எப்போது ? என்ற பொதுமக்களின் கோரிக்கையை இந்தப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்களிடமும், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளிடம் அவ்வப்போது தெரியப்படுத்தி வந்தனர்.

சேது சமுத்திர திட்ட விழிப்புணர்ச்சி மாநாடு குறித்து விளக்கம் அளிப்பதற்காக தஞ்சை மாவட்டம் அதிரைக்கு கடந்த [ 15-05-2013 ] அன்று முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு வந்தார். அப்போது அவருக்கு அதிரை நகர வர்த்தக சங்கம் சார்பில் மேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் VT. தஹலா மரைக்காயர் அவர்களால் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன் பின்னர் பிலால் நகர் அருகே திறக்கப்படாமல் உள்ள இரயில்வே கேட்டினால் பல விபத்துக்கள் நடக்கின்றன என்பதையும், இதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து டி.ஆர்.பாலுவின் கவனத்துக்கு எடுத்துச்சொல்லப்பட்டது.

அன்றைய தினமே சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல் அதற்கு உடனே இரயில்வே கேட்டை திறப்பதற்குரிய ஏற்பாடு செய்து தருகிறேன் என உறுதி அளித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறையினர் கடந்த [ 21-05-2013 ] அன்று பகல் 1 மணியளவில் திருவாரூரிலிருந்து வருகை தந்து ஆய்வை மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல், JCP இயந்திரத்தைக் கொண்டு சாலையில் அமைந்துள்ள வேகத்தடைகள், அபாயகரமான வளைவை எச்சரிக்கும் அறிவிப்பு பலகைகள், முட்புதர்கள் போன்றவற்றை அப்புறப்படுத்திவிட்டு அன்றைய தினமே வாகன போக்குவரத்துக்காக பாதை திறந்து விடப்பட்டது.


இதற்காக அதிரை நகர வர்த்தக சங்க நிர்வாகியும், மேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலருமாகிய VT. தஹலா மரைக்காயர் அவர்களின் தலைமையில் அதிரையைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் முஹம்மது சம்சுதீன் [ தீன் மெடிக்கல்ஸ் ], தா.அ. முஹம்மது சலீம், J.J. சாகுல் ஹமீத், புஹாரி [ காவண்ணா ], அஹமது [ சாரா பில்டிங் ] Y. மைதீன், பசூல்கான் [ கவுன்சிலர் ], செய்யது முஹம்மது உள்ளிட்டோர் இன்று [ 22-05-2013 ] மாலை TR. பாலு அவர்களை நேரில் சந்தித்து தங்களின் நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொண்டனர்.

திருவாரூர் - காரைக்குடி அகல ரெயில் பாதை பணிகள் குறித்து கருத்து தெரிவிக்கையில்...

வரும் ஆண்டுகளில் பணிகள் மும்முரமாக நடைபெறும் என்றும், இதன் முதல் பகுதியாக காரைக்குடி - பட்டுக்கோட்டை வழித்தடத்தின் பணிகள் வருகின்ற 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவுறும் என்று தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

4 comments:

  1. பதிவுக்கு நன்றி

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. சகோ தஹ்லான் அவர்கள் ..

    கவுன்சிலர் பதவியை விட பெரிய பதவி கிடைக்க

    வாழ்த்துக்கள் ..வரும் காலங்களில் சேர்மன் பதவிக்கு

    போட்டியிடலாம் இது ஏன் சொந்த கருத்து

    ReplyDelete
  3. டி.ஆர்.பாலு அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இவர் கடந்த மத்திய சாலை போக்குவரத்து அமைச்சாராக இருக்கும்போது தான் இசிஆர் சாலைக்கு மத்திய, மாநில, உலக வங்கி நிதியுடன் சாலை அமைக்கப்பட்டது. மத்திய என் எச் என்றால் அது முன்னாள் அமைச்சர் டி.ஆர் பாலு அவர்களையே சாரும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.