.

Pages

Saturday, May 11, 2013

தலை மேல் விழுந்த கட்டடம் துணையைப் பிரியாத கணவன் மனைவி உலகை உலுக்கிய படம்!

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த கட்டிட மனைவி விபத்தை விட அந்த விபத்தின்போது உள்ளே சிக்கிபிணமாக மீட்கப்பட்ட ஒரு கணவன், மனைவியின் படம்தான் உலகையே உலுக்கி விட்டது  கட்டிடம் இடிந்து விழுந்தபோது மனைவியை விட்டுப் பிரியாமல்  அவரைக் கட்டிப் பிடித்தபடி காணப்படுகிறார் அந்த கணவர்  இந்தப் படம்தான் அனைவரையும் உலுக்கி விட்டது இருவரும் ஒருவரை ஒருவர் பிரியாமல் தப்பித்து்ப போக முயலாமல் கட்டிப் பிடித்தபடி பிணமாகியுள்ளனர்

கடந்த மாதம்   8 மாடிகளைக் கொண்ட ராணா பிளாசா என்ற கார்மெண்ட் ஆலையின் கட்டடம் சரிந்து விழுந்தது  இதில் இதுவரை 900 பேர் உயிரிழந்துள்ளனர் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) 2000 பேர் வரை காயமடைந்துள்ளனர்,

இந்த கட்டட இடிபாடுகள் இன்னும் கூட முழுமையாக அகற்றப்படவில்லை  இந்த நிலையில் அந்த இடிபாடுகளில் ஒரு தம்பதியின் உடல்கள் சிக்கியுள்ளன  அதைப் பார்த்த அத்தனை பேரும் அதிர்ந்து போய் விட்டனர்  கணவனும்  மனைவியும்  பிரியாமல் இறுக்கி அணைத்தபடி காணப்பட்டனர்

இருவரும் தப்பித்துப் போக முயலவில்லை  மாறாக மரணத்தின் கடைசி நொடி வரை இணை பிரியாமல் இருக்க முடிவு செய்து இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருந்துள்ளனர்   இந்தக் காட்சியைக் கண்ட அனைவரும் கலங்கிப் போய் விட்டனர்


அந்தத் தம்பதியினரின் உடல்களின் கீழ்ப் பகுதி கீழே புதைந்து விட்டன. மேல் பகுதி மட்டுமே தெரிகிறது. அந்த ஆணின் கண்களில் கண்ணீர் போல ரத்தம் ஓடி உறைந்து போயிருந்தது. இந்தப் புகைப்படத்தை தஸ்லிமா அக்தர் என்பவர் எடுத்து வெளியிட்டுள்ளார்.

பரிந்துரை : மான். A. ஷேக் [ கனடா ]
நன்றி : தட்ஸ்தமிழ்

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    இதை நானும் பல ஊடகங்களில் படித்தேன், தூய உள்ளம், தூய்மையாக இணைந்து பிரிந்து விட்டது.

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    இணைப்பிரியாத தம்பதிகள்.

    ReplyDelete
  3. சமீபத்தில் நடந்த பரிதாபத்திற்குரிய இந்த விபத்து உலக மக்களையே உலுக்கிவிட்டது. அதில் இத்தம்பதியினரின் புகைப்படம் கல் நெஞ்சையும் கரைய வைக்கும்படி உள்ளது. என்ன செய்வது நடந்து முடிந்ததை விதி என்று தான் சொல்ல முடியும்.இவர்களின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துவா செய்வோமாக.!

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.