.

Pages

Thursday, May 30, 2013

அதிரைப் பேரூராட்சித் தலைவர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோரின் அன்பான வேண்டுகோள் [ காணொளி ] !

'ஒரு பிளாஸ்டிக் பையை சராசரியாக நாம் பயன்படுத்திக் கொள்ளப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கானஆண்டுகள்' என்பது ஆய்வு அறிக்கைகள்.
பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து சுகாதாரமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழல் பாதுகாப்பைப் பெற வேண்டும் என்ற உயரிய விழிப்புணர்வு கருத்துகளுடன் நமதூர் பேரூராட்சி நிர்வாகத்தால் ப்ளாஸ்டிக் பை மற்றும் அதன் தொடர்புடைய மக்காத பொருட்களை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் கடந்த ஆண்டு தடை செய்யபட்டதோடு மட்டுமல்லாமல் அவற்றை மீறுவோர் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வந்தன.

தடை குறித்த அரசின் ஆணை நகல் எண் : 132 / 2012 Dated 16-08-2012 அன்று தஞ்சை மாவட்ட அரசிதழிலும் வெளியிடப்பட்டன.

அதில்,
முதல் தடவை மீறுவோர் மீது ரூபாய் 250/-ம்
இரண்டாவது தடவை மீறுவோர் மீது ரூபாய் 500/-ம்
மூன்றாவது தடவை மீறுவோர் மீது ரூபாய் 1000/-ம்

மேலும் தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் மீறினால் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளடைவில் பொதுமக்களின் போதிய ஒத்துழைப்பு மற்றும் மீறுவோர் மீது பேரூராட்சியின் போதிய நடவடிக்கை ஆகியன சற்று குறைந்து காணப்பட்டதால் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடுகள் நகரில் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தன. இதனால் நகரில் பிளாஸ்டிக் பைகளின் குப்பைகள் ஆங்காங்கே காணப்பட்டதோடு மட்டுமல்லாமல் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது.

இதன் தொடர்ச்சியாக புதிதாக பொறுப்புக்கு வந்த அதிரை பேரூராட்சியின் செயல் அலுவலர் அவர்கள், அதிரை பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம் அவர்களின் வழிகாட்டுதலின் படி மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு அதிரை மக்களிடயே விழிப்புணர்வை ஏறபடுத்தி நகரில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை அறவே இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற நல்லதொரு செயல் திட்டத்துடன் வருகின்ற [ 01-06-2013 ] அன்று முதல் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு அதிரை நகரில் தடை செய்வதற்குன்டான அறிவிப்புகளை நாளிதழ், ஒலிப்பெருக்கிகள், தொலைக்காட்சி, துண்டு பிரசுரம் ஆகியனவற்றில் பிராச்சாரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அதிரை பேரூராட்சித் தலைவர்  S.H. அஸ்லம் மற்றும் செயல் அலுவலர் ஆகியோரை  'அதிரை நியூஸ்' சார்பாக அணுகி  அவர்களின் கருத்தைப்பெற்றோம்.

4 comments:

  1. //'ஒரு பிளாஸ்டிக் பையை சராசரியாக நாம் பயன்படுத்திக் கொள்ளப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கானஆண்டுகள்' என்பது ஆய்வு அறிக்கைகள்.//

    இது அரசுக்கும் அதனை உற்பத்தி செய்ய அனுமதிக்கும் அதிகாரிகளுக்கும் தெரிந்ததுதானே!

    பாமரன் என்ன செய்வான்?

    நவீனம் என்று அவனை பழக்கப்படுதிவிட்டும், அதன் விநியோகம், உற்பத்தி இவைகளை கட்டுப்படுத்தாமலும், தடுக்காமலும் பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பது வீண் பிரச்சனைகளை உண்டுபண்ணும். அமைதியை கெடுக்கும்.

    மாற்று வழிகளை தயாராக வைத்துக்கொண்டு தடுத்தால் அதாவது உற்பத்தி தளங்களிலே தடுத்தால் தான் ஒழிக்கமுடியும்.

    பிளாஸ்டிக் பயன்பாடு மிக மிக கெடுதல் என்பது எல்லோருக்கும் தெரியாதது அல்ல.

    சரியான வழிமுறைகள் இல்லாது மக்களை இன்னலுக்கு உண்டாக்குவது நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள்தானே அன்றி வேறில்லை.

    வெளிநாட்டின் பொருள்களை சட்டம்போட்டு தடுக்க முடிந்ததா?

    மாறாக வெளிநாட்டு பொருள்கள் இலகுவாக கிடைக்கப்பட்டு, அதற்கு போட்டியாக உள்நாட்டிலே உற்பத்தித்திறனை மேம்படுத்தி சந்தைபடுத்துதல் மூலமாகத்தான் வெற்றி காண்ட அமரர் திரு ராஜீவ் காந்தியின் சரித்திரம் மறந்து போய்விட்டதா?

    சரியான அதேநேரத்தில் மக்களுக்கு சிரமங்கள் இல்லாத முறையில் பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதுதான் மக்கள் விரும்பும் நிர்வாகமுறை.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    மீண்டும் கடுமையாக முயற்சி எடுத்து இருப்பது வரவேற்க்கத்தக்கது, அதன் தீமைகளை பட்டியல் போட்டு சொன்னது மிகவும் நல்லது.

    கடந்த காலங்களில் எங்களுக்கு இந்த பிளாஸ்டிக் பைகளைப் பற்றி அறவே தெரியாது, கடைகளில் சாமான்கள், காய்கறிகள், மீன், இறைச்சி போன்றவற்றுக்கு எல்லோர் வீட்டிலும் தனித்தனியாக துணிப்பைகள் இருக்கும். அதைக் கொண்டுதான் மேலே சொன்ன அத்தனை பொருட்களையும் வாங்கி வந்தோம். அந்த துணிப்பைகளை தினமும் நீரில் கழுவி சுத்தமாக வைத்துருந்தோம்.

    ஒரு பக்கம் பொது மக்கள் இது மாதிரி துணிப்பைகளை பயன் படுத்த பழகிக் கொள்ளனும், மறு பக்கம் இதன் தயாரிப்பை அரசு உடனே நிறுத்த வேணும், இன்னொரு பக்கம் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை போச்சே என்று உண்ணா விரதம் இருப்பார்கள், அதையும் சந்திக்க அரசுக்கு தைரியம் இருக்கணும் (நம் நாடு ஒரு ஜனநாயக நாடு).

    நாலு பக்கம் ஒத்துழைப்பு இருந்தால் எல்லாம் சரியாகி விடும்.

    இந்த பிளாஸ்டிக்கின் தீமையைப்பற்றி நன்கு தெரிந்து இருக்கும் அரசு அதிகாரிகள், இதை மக்கள் புழக்கத்திற்கு வருமுன் தடுத்து இருக்கலாமே, இவ்வளவு சிரமங்கள் இருந்துருக்காதே, இதை ஏன் முன்கூட்டியே செய்ய வில்லை. தகுந்த பதில் கிடைக்குமா?

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. மீண்டும் கடுமையாக முயற்சி எடுத்து இருப்பது வரவேற்க்கத்தக்கது, அதன் தீமைகளை பட்டியல் போட்டு சொன்னது மிகவும் நல்லது.

    ReplyDelete
  4. பிளாஸ்ட்டிக்கிளான பைகளினால் ஏற்ப்படும் தீமைகருதி சுற்றுப்புற சுகாதரத்தீர்வு காண ஒழிக்கப்படவேண்டியவைகளே.!

    மீண்டும் நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்க்கப்பட வேண்டியவை.!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.