.

Pages

Friday, May 10, 2013

AFFA நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் முதல் நாள் நிகழ்ச்சி !

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டியின் முதல் ஆட்டம் இன்று [ 10-05-0213 ] மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.





அதிரை காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன், காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் A. ஜலால், காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரன், கால்பந்தாட்டக் கழக தஞ்சை மாவட்டத் தலைவர் கோபாலக்கிருஷ்ணன் ஆகியோர் இன்றைய முதல் ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.

இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தஞ்சாவூர் அணியினரோடு கண்டனூர் அணியினர் மோதினர். இதில் தஞ்சை அணியினர் 1 கோல் அடித்து 1-0 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றனர். இன்றைய முதல் ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்.

நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் பொதக்குடி அணியினரோடு மேலநத்தம் அணியினர் மோத உள்ளனர்.

நன்றி : ஆஷிக் அஹமது / அஹமது மொய்தீன் / இத்ரீஸ்


5 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  2. செய்தி அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. நமதூர் அணி வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.