தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக்கூட்ட அரங்கில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் இன்று (27.07.2015) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உழவர் பாதுகாப்பு திட்ட திருமண உதவித் தொகை 2 பயனாளிகளுக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம் ரூ.16 ஆயிரத்திறகான காசோலைகளையும், இறப்பு நிவாரணத் தொகையாக 2 பயனாளிக்கு ரூ.22 ஆயிரத்து 500 காசோலைகளையும், 6 பயனாளிகளுக்கு ஊனமுற்றோருக்கான மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 1 பயனாளிக்கு திருமணமாகாத முதிர்கன்னியருக்கான மாதாந்திர உதவித்தொகை ஆணையினையும், 1 பயனாளிக்கு இந்திரா காந்தி தேசிய மாதாந்திர உதவித் தொகை ஆணையினையும், 1 பயனாளிக்கு ஆதரவற்ற விதவை மாதாந்திர உதவித் தொகை ஆணையினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.
வருவாய்த்துறையில் கருணை அடிப்படையில் ஒரு நபருக்கு அலுவலக உதவியாளராக பணி நியமன ஆணையினையும், பட்டுக்கோட்டை வட்டம் மற்றும் நகரம் பட்டுக்கோட்டை நகர நிலவரி திட்டத்தின் கீழ் 65 நபர்களுக்கு நிலவரி திட்ட மனைவரி பட்டா ஆணைகளையும், 32 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும். ஆக மொத்தம் 111 பயனாளிகளுக்கு ரூ.38 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆணைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், துணை ஆட்சியர் திருமதி.ஜனனி சௌந்தர்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.கங்காதரன், வட்ட வழங்கல் அலுவலர் திரு.மனோகரன், சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் திரு.எஸ்.ரவிச்சந்திரன், நில அளவைத்துறை உதவி இயக்குநர் திரு.வே.குழந்தைவேலு, நகர நிலவரி திட்ட வட்டாட்சியர் திரு.ரா.பானுகோபன், சார் ஆய்வாளர் திரு.பி.குணசேகர், முதுநிலை வரைவாளர் திரு.வி.ஆனந்தராஜ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை விபரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உழவர் பாதுகாப்பு திட்ட திருமண உதவித் தொகை 2 பயனாளிகளுக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம் ரூ.16 ஆயிரத்திறகான காசோலைகளையும், இறப்பு நிவாரணத் தொகையாக 2 பயனாளிக்கு ரூ.22 ஆயிரத்து 500 காசோலைகளையும், 6 பயனாளிகளுக்கு ஊனமுற்றோருக்கான மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 1 பயனாளிக்கு திருமணமாகாத முதிர்கன்னியருக்கான மாதாந்திர உதவித்தொகை ஆணையினையும், 1 பயனாளிக்கு இந்திரா காந்தி தேசிய மாதாந்திர உதவித் தொகை ஆணையினையும், 1 பயனாளிக்கு ஆதரவற்ற விதவை மாதாந்திர உதவித் தொகை ஆணையினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.
வருவாய்த்துறையில் கருணை அடிப்படையில் ஒரு நபருக்கு அலுவலக உதவியாளராக பணி நியமன ஆணையினையும், பட்டுக்கோட்டை வட்டம் மற்றும் நகரம் பட்டுக்கோட்டை நகர நிலவரி திட்டத்தின் கீழ் 65 நபர்களுக்கு நிலவரி திட்ட மனைவரி பட்டா ஆணைகளையும், 32 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும். ஆக மொத்தம் 111 பயனாளிகளுக்கு ரூ.38 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆணைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், துணை ஆட்சியர் திருமதி.ஜனனி சௌந்தர்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.கங்காதரன், வட்ட வழங்கல் அலுவலர் திரு.மனோகரன், சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் திரு.எஸ்.ரவிச்சந்திரன், நில அளவைத்துறை உதவி இயக்குநர் திரு.வே.குழந்தைவேலு, நகர நிலவரி திட்ட வட்டாட்சியர் திரு.ரா.பானுகோபன், சார் ஆய்வாளர் திரு.பி.குணசேகர், முதுநிலை வரைவாளர் திரு.வி.ஆனந்தராஜ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.