.

Pages

Sunday, July 19, 2015

ஓய்வில்லாமல் உழைக்கும் அதிரை கவுன்சிலர் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டு பள்ளி தர்ஹா பகுதியில் மணல் குவியல் காணப்படுவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக இங்கு குவிந்து காணப்படும் மணல் காரணமாக வேகமாக இருசக்கர வாகனங்களில் வருவோர் வளைவில் சறுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டு வந்தது. குறிப்பாக இந்த வழியே சைக்கிளில் செல்லும் வயதானவர்கள் அடிக்கடி தடுக்கி விழுவது உண்டு.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் இருவர் வழங்கிய நிதி உதவிலிருந்து ட்ரோஸ்ட்டர் வாகனம் மூலம் மணல் குவியல் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த ஏற்பாடுகள் அனைத்தும் தனக்கு கிடைக்கும் நேரங்களை பயனுள்ள வகையில் பொதுநல சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வரும் அதிரை பேரூராட்சியின் 15 வது வார்டு கவுன்சிலர் அப்துல் லத்திப் மேற்கொண்டார்.

ஓய்வில்லாமல் உழைக்கும் இவரது பொதுநலப்பணியை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்துகின்றனர். இவரைப்போன்று அதிரையின் பிற பகுதிகளின் வார்டு கவுன்சிலர்களும் அதிக ஈடுபாட்டோடு பொதுநலப்பணி ஆற்ற முன்வர வேண்டும்' என மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.