.

Pages

Wednesday, July 29, 2015

பட்டுக்கோட்டையில் PFI நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் !

மத துவேசத்தை தூண்டும் பேச்சுக்களால் தமிழக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த இருப்பதாக கூறி பா.ஜ.க மற்றும் சங்பரிவார அமைப்புகள் மீது தமிழக அரசை நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பேச்சாளர் ஜர்ஜிஸ் முஹம்மத் கண்டன உரையாற்றினார். இதில் 'பா.ஜ.க வினரின் தந்திரங்களை தமிழக அரசு சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும். இது போன்ற மக்களை பிளவுபடுத்தும் வேலைகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்பதை பா.ஜ.க மற்றும் சங்கபரிவார அமைப்புகள் புரிந்து கொள்ளும் வண்ணம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

முன்னதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பட்டுக்கோட்டை டிவிசன் செயலாளர் ஷேக் அஜ்மல் வரவேற்புரை ஆற்றினார். எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ஹாஜி ஷேக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டார். ஆர்ப்பாட்ட முடிவில் அதிரை ரிழா நன்றி கூறினார். இந்த ஆரப்பாட்டதில் ஏராளமான PFI அமைப்பினர் கலந்துகொண்டனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.