.

Pages

Wednesday, July 29, 2015

கலாம் மறைவு: அதிரையில் ஃபிளக்ஸ் பேனர்கள்!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் நேற்று முன்தினம் காலமானதை அடுத்து நினைவு கூறும் வகையில் அதிரையில் இயங்கும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, லயன்ஸ் சங்கம், அதிரை இளைஞர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் அதிரையின் பிரதான பகுதிகளில் ஃபிளக்ஸ் பேனர்களை வைத்து தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

1 comment:

  1. பெற்ற தாய் தந்தைக்கு நல்ல மகனாய், ஆசிரியர்களுக்கு சிறந்த மாணவனாக, இந்தியாவின் சாதாரண குடிமகனாய், வல்லரசாக மாறுவோம் என்று எழுச்சி ஊட்டிய நாட்டின் முதல் குடிமகனாய், அக்னி ராக்கெட் விட்டு அண்டமெல்லாம் அதிரவைத்து, பொக்ரானில் அணுகுண்டு போட்டு எதிரி நாடுகளை பொறிகலங்க நடுங்க வைத்து , இளைஞர்கள் முன்னேற்றமே இந்தியாவின் முன்னேற்றம் என்று "கனவு காணுங்கள்" என புதியதோர் புரட்சி செய்தது , கல்வி நிலையங்கள் தோறும் சென்று" மாணவ செல்வங்களே நாட்டின் செல்வங்கள் "என அவர்களுக்கு ஊக்கமளித்தது இன்னும் உங்கள் சாதனைகள் ஏராளம். இத்தனையும் செய்து ஒருதுளிகூட கர்வமில்லாமல் எளிமையின் உருவமாய் கள்ளமில்லா சிரிப்பில் எங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டவரே அண்ணலே காந்தியடிகளை நாங்கள் உங்கள் உருவில் கண்டோம் எண்பத்தி நான்கு வயதிலும் தளராமல் நாட்டுக்காக உழைத்த உத்தமரே மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக தங்களை அமரவைத்து அழகுபார்க்கலாம் என எண்ணியிருந்த வேளையில் , எங்களை மீளாத துயரத்தில் ஆழ்த்தி கண்களில் அருவி ஆறாக பெருகச்செய்து , விடைகொடுங்கள் என சொல்லாமல் சென்றுவிட்டீர்களே!

    உலகம் விட்டு சென்றீர்கள் எம் உள்ளத்தை விட்டு அல்ல!!!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.