தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த சனிக்கிழமை முதல் வைக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 3-ம் தேதி தொடங்கியது. இந்தத் திட்டத்தின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டு, நூறு சதம் பிழையற்ற தூய்மையான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படவுள்ளது.
இந்தப் பணியின் முதல் கட்டமாக 2015மார்ச் 25-ம் தேதி வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டை இணைக்கும் பணி நடைபெற்றது.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 18 லட்சத்து 17 ஆயிரத்து 605 வாக்காளர்களின் விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை இணைக்கும் பணியின்போதும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் தல ஆய்வின்போதும் குறிப்பிட்ட முகவரியில் இல்லாதவர்கள், வாக்காளர் பட்டியல் இரட்டிப்பு, இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள் பெயர்களை நீக்கம் செய்து வரைவு பட்டியல் கடந்த சனிக்கிழமைமுதல் அந்தந்த வட்ட அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இணையதளத்திலும் பார்வையிட்டு ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.
தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 3-ம் தேதி தொடங்கியது. இந்தத் திட்டத்தின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டு, நூறு சதம் பிழையற்ற தூய்மையான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படவுள்ளது.
இந்தப் பணியின் முதல் கட்டமாக 2015மார்ச் 25-ம் தேதி வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டை இணைக்கும் பணி நடைபெற்றது.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 18 லட்சத்து 17 ஆயிரத்து 605 வாக்காளர்களின் விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண், கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை இணைக்கும் பணியின்போதும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் தல ஆய்வின்போதும் குறிப்பிட்ட முகவரியில் இல்லாதவர்கள், வாக்காளர் பட்டியல் இரட்டிப்பு, இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள் பெயர்களை நீக்கம் செய்து வரைவு பட்டியல் கடந்த சனிக்கிழமைமுதல் அந்தந்த வட்ட அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இணையதளத்திலும் பார்வையிட்டு ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.