அதிரை சிஎம்பி லேன் பகுதியை அப்துல் ரஹீம் ( வயது 63 ). அதே பகுதியை சேர்ந்தவர் பைசல் அஹமது ( வயது 25 ) இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனங்களை வீட்டின் முன்புறம் நிறுத்தி வைத்துள்ளனர். அப்போது அதனை அடையாளம் தெரியாத திருடர்கள் திருடிச்சென்று விட்டனர். இதையடுத்து அதிரை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிரையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனது இருசக்கர வாகனத்தை பறிகொடுத்த மூத்த குடிமகன் அப்துல் ரஹீம் நம்மிடம் கூறுகையில்...
பெருநாள் அன்று இரவு எனது வீட்டின் முன்புறம் நிறுத்தி இருந்த எனது பைக்கை திருடர்கள் திருடிச்சென்று விட்டனர். அதே போல் பக்கத்து வீட்டின் முன்புறம் நிறுத்தி வைத்துருந்த பைக்கையும் திருடிச்சென்று விட்டனர். திருடு போன எனது பைக்கை திருடர்களிடமிருந்து மீட்டு தர வேண்டி அதிரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இந்த பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் காவல்துறையினர் இந்த பகுதியில் ரோந்தில் ஈடுபட வேண்டும்' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.