.

Pages

Wednesday, July 22, 2015

அதிரையில் ரெட் கிராஸ் நடத்திய பேரிடர் கால மேலாண்மை பயிலரங்க நிகழ்ச்சி !

மாநில ஊரக வளர்ச்சி செயல்படுத்தி வரும் சமுதாயம் சார்ந்த பேரிடர் அபாய மேலாண்மைத்திட்டத்தின் கீழ் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பேரிடர் காலங்களில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மற்றும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்வது குறித்த பயிலரங்க நிகழ்ச்சி இன்று காலை அதிரை அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் அதிரை சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ் தொடங்கி வைத்தார். சமுதாயம் சார்ந்த பேரிடர் அபாய மேலாண்மைத்திட்ட மாவட்ட அலுவலர் திரு. ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.

பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. பி.வி சாவித்திரி வரவேற்புரை ஆற்றினார். பயிற்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மருத்துவர் எட்வின் பேரிடர் அவசர காலங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், இதர பணியாளர்கள் விபத்து நடந்த இடத்தில் தங்களது பணியை எவ்வாறு தொடங்க வேண்டும், விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட நபர்களுக்கு முதலுதவி அளித்து உயிர்களை காப்பாற்றுவது மற்றும் காயத்தின் தன்மைகேற்ப அவர்களை பிரித்து விரைவாக சிகிச்சை அளிப்பது ஆகியவை குறித்து பயிற்சி அளித்தார்.

பயிற்றுனர்கள் திரு. சுரேஷ் குமார், திரு. துளசி துரை மாணிக்கம் ஆகியோர் முதலுதவி செயல்முறை மற்றும் பயிற்சி மற்றும் மயக்கம், தீ விபத்து, எலும்பு முறிவு, நீரில் மூழ்கியவர்கள் மற்றும் வலிப்பு நோய் குறித்தும் அவர்களுக்கு முதலுதவி செய்வது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.இந்த திட்டம் தஞ்சை மாவட்ட கடலோரப்பகுதிகளின் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பயிரலரங்க நிகழ்ச்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள், மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியினர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 

3 comments:

  1. பொது மக்கள்; ஒருவர் விபத்தில் சிக்கியவர்க்கு, உதவி தேவபடுவோருக்கு முதலுதவி செய்யாமல் அதனை படமாக்கி சோசியல் மீடியாவில் அதிக லைக் வாங்கக் கூடிய மன நிலைமையில் தான் உள்ளார்கள். அப்படி செய்தாலும் யாரு கோர்ட் கேசுன்னு போவா என்று மனதை கல்லாக மாற்றிக்கொள்கிறார்கள். இப்பயிலரகம் வரவேர்க்கத்தக்கவை, மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் தெருமுனை பிரசாரம் மேற்கொண்டால் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஆக்கபூரவமான நிகழ்வு

    ReplyDelete
  3. ஆக்கபூரவமான நிகழ்வு

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.