.

Pages

Monday, July 20, 2015

வதந்தியை நம்ப வேண்டாம் !

செல்பேசி வாயிலாக சிலிண்டரை பதிவு செய்யும் போது, தெரியாமல் '0'-ஐ அழுத்திவிட்டால், வாடிக்கையாளரின் கேஸ் மானியம் ரத்தாகிவிடும் என்ற வதந்தி கிளம்பியது.

சிலிண்டருக்கு பதிவு செய்யும் போது, ஐவிஆர்எஸ் முறையில் ஒலிக்கும் குரல், உங்களால் முடிந்தால், கேஸ் மானியத்தை திரும்ப அளித்துவிடுங்கள். அதற்கு '0'-ஐ அழுத்துங்கள். உங்களுக்கு சிலிண்டர் பதிவு செய்ய எண் 1 ஐ அழுத்துங்கள் என்று கூறுகிறது.

வாடிக்கையாளர்கள்  தவறுதலாக '0'-ஐ அழுத்திவிட்டால் உடனடியாக அவர்களது கேஸ் மானியம் ரத்தாகிவிடும் என்று வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ஐஓசி அதிகாரிகள் கூறியதாவது, 
தெரியாமல் பூஜ்யத்தை அழுத்தினாலே கேஸ் மானியம் ரத்தாகாது. '0'-ஐ அழுத்திய பிறகு அடுத்த கேள்விகள் வரும். அதில் எண் 7 ஐ அழுத்தினால் மட்டுமே கேஸ் மானியம் ரத்தாகும்.

அப்படியே தவறி 7ஐயும் அழுத்திவிட்டாலும் கூட, உடனடியாக சிலிண்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு மீண்டும் கேஸ் மானியத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். எனவே வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை' என கூறுகின்றனர்.

நன்றி:தினமணி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.