.

Pages

Saturday, July 18, 2015

அதிரையில் TNTJ நடத்திய பெருநாள் திடல் தொழுகை !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பில் பெருநாள் திடல் தொழுகை ஈசிஆர் சாலை பிலால் நகர் பெட்ரேல் பங்க் எதிரில் உள்ள கிராணி மைதானத்தில் இன்று காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. தொழுகை முடிந்தவுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றன.

அதிரையில் வசிக்கும் அனைத்து பகுதியில் உள்ள பெரும்பாலான ஆண்கள், பெண்கள் பெரும்திரளாக தொழுகையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திடலில் பெண்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

தொலைதூரத்திலிருந்து வந்த பெரும்பாலானோர் தங்களின் வாகனத்தை சாலையில் நிறுத்தி இருந்ததால் தொழுகை முடியும் வரை அப்பகுதியில் வாகன நெருக்கடி இருந்தது.
 
 
 
 


2 comments:

  1. மண்ணின் மைந்தர்களுக்கு அடியேனின் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.அல்ஹம்துலில்லாஹ் .

    ReplyDelete
  2. இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என்னுடைய உளமார்ந்த பெருநாள் வாழ்த்துக்கள். சமத்துவமும் சகோதரதத்துவமும் செழித்து ஓங்கி இல்லாமை பிரிவினை உள்ளிட்டவைகள் நம்மை விட்டு அகல எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.