பட்டுக்கோட்டை தலைமை தபால்நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அ.தி.மு.க. அரசை கண்டித்தும் பட்டுக்கோட்டை தொகுதி தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை வகித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு கலந்துகொண்டு பேசினார்.
ஆர்பாட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன், முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏனாதி பாலசுப்பிரமணியன், கா.அண்ணாதுரை, எம்.ராமச்சந்திரன் மற்றும் நகர, ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேட்டூர் அணையை உடனடியாகத் திறந்து விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். பட்டுக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பாதியில் நிற்கும் புறவழிச்சாலையை விரைந்து முடிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. முடிவில் பட்டுக்கோட்டை நகர பொறுப்பாளர் த.மனோகரன் நன்றி கூறினார்.
தன் கடைசி மூச்சைக் கூட, மாணவர் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது நிறுத்தியவர், அக்னி நாயகன் அப்துல் கலாம், இந்தியா 7 நாள் துக்கம் அனுசரிக்கப் படும் என்று அறிவித்திருக்கு; ஏன் அமெரிக்க கூட தன் நாட்டு கொடியை அர கம்பத்தில் பறக்க விட்டு தன் அஞ்சலியை செலுத்தி இருக்கும் போது; இவர்களால் கட்சி கொடியை தூக்காமல் இருக்க முடியாதா? இந்தியாவே கண்ணீரில் மூழ்கி இருக்கும்பொழுது தமிழ் நாடு TASMAK மூடாமல் தண்ணீரில் மூழ்கி இருப்பது வேதனையிலும் வேதனை.
ReplyDelete