பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை
வருடா வருடம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித் தொகையை பெறுவதற்காக ஒரு சில துணை ஆவணங்களாகிய “வருமானச்சான்று Income
Certificate, வகுப்புச்சான்று Community
Certificate, பிறப்பிடச்சான்று Nativity Certificate” போன்ற ஆவணங்களை பள்ளியில்
குறிப்பிட்ட நேரத்தில் சமர்பிக்க வேண்டும்.
இந்த ஆவணங்களை பெறுவதில் ஒரு சில கால தாமதம் ஏற்பட்டதினால்! பெற்றோர்கள்
மற்றும் தாய்மார்கள் மத்தியில் வதந்திகளும் பீதிகளும் நிலவுகின்றன.
தற்போது, ஆவணங்கள் துரிதமாக வெளி வரத் தொடங்கி விட்டன, மேலும், மேலே சொல்லப்பட்ட
ஆவணங்களை சமர்பிக்க கடைசி தேதி அடுத்த மாதம் “ஆகஸ்ட் 15/2015” வரை உண்டு என்று நமதூர் “இமாம்
ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில்” பெற்றோர்கள் பார்வையில் நன்றாக
தெரியும் வகையில் தெளிவாக ஒட்டப்பட்டுள்ளது.
ஆகவே, பெற்றோர்கள், தாய்மார்கள் இது குறித்து பீதி அடைய வேண்டாம் என்று இதன்
மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மேலே சொல்லப்பட்ட ஆவணங்களை பெறுவதில் துரிதம்
காட்ட வேண்டும்.
இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்)
கோ.மு. முஹம்மது அலியார்.
75 02 87 07 67
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.