இதை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் அதிரை சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ் தொடங்கி வைத்தார். சமுதாயம் சார்ந்த பேரிடர் அபாய மேலாண்மைத்திட்ட மாவட்ட அலுவலர் திரு. ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. பி.வி சாவித்திரி வரவேற்புரை ஆற்றினார். பயிற்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மருத்துவர் எட்வின் பேரிடர் அவசர காலங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், இதர பணியாளர்கள் விபத்து நடந்த இடத்தில் தங்களது பணியை எவ்வாறு தொடங்க வேண்டும், விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட நபர்களுக்கு முதலுதவி அளித்து உயிர்களை காப்பாற்றுவது மற்றும் காயத்தின் தன்மைகேற்ப அவர்களை பிரித்து விரைவாக சிகிச்சை அளிப்பது ஆகியவை குறித்து பயிற்சி அளித்தார்.
பயிற்றுனர்கள் திரு. சுரேஷ் குமார், திரு. துளசி துரை மாணிக்கம் ஆகியோர் முதலுதவி செயல்முறை மற்றும் பயிற்சி மற்றும் மயக்கம், தீ விபத்து, எலும்பு முறிவு, நீரில் மூழ்கியவர்கள் மற்றும் வலிப்பு நோய் குறித்தும் அவர்களுக்கு முதலுதவி செய்வது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.இந்த திட்டம் தஞ்சை மாவட்ட கடலோரப்பகுதிகளின் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பயிரலரங்க நிகழ்ச்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள், மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியினர் கலந்து கொண்டனர்.
பொது மக்கள்; ஒருவர் விபத்தில் சிக்கியவர்க்கு, உதவி தேவபடுவோருக்கு முதலுதவி செய்யாமல் அதனை படமாக்கி சோசியல் மீடியாவில் அதிக லைக் வாங்கக் கூடிய மன நிலைமையில் தான் உள்ளார்கள். அப்படி செய்தாலும் யாரு கோர்ட் கேசுன்னு போவா என்று மனதை கல்லாக மாற்றிக்கொள்கிறார்கள். இப்பயிலரகம் வரவேர்க்கத்தக்கவை, மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் தெருமுனை பிரசாரம் மேற்கொண்டால் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆக்கபூரவமான நிகழ்வு
ReplyDeleteஆக்கபூரவமான நிகழ்வு
ReplyDelete