.

Pages

Wednesday, October 14, 2015

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு !

வாக்காளர் பட்டியல் - சிறப்பு சுருக்க திருத்த முறை 2016 வாக்காளர்களிடமிருந்து தேர்தல் படிவங்கள் பெறும் நாள் 24-10-2015 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தஞ்சை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தால் 01-01-2016 ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை தயார் செய்து 15-09-2015 அன்று வரைவு வாக்காளர் பட்டிய்ல் வெளியிடப்பட்டது, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல் தொடர்பான தேர்தல் படிவங்களை ( படிவம் எண் 6,7,8,8ஏ முதலியன ) வாக்காளர்கள் வருகிற 24,10-2015 வரை வழங்கலாம் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 01-01-2016 நாளன்று 18 வயது பூர்த்தியடையும் நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க அல்லது வாக்காளர் பட்டியலிலிருந்து இறந்தவர் பெயர்களை நீக்க. அல்லது வாக்காளர் பட்டியலில் ஏதேனும் திருத்தம் செய்ய விரும்பும் வாக்காளர்கள் உரிய படிவங்களில் தொடர்புடைய வட்ட அலுவலகங்களில- நகராட்சி அலுவலகங்களில் 24,10-2015 வரை வழங்கலாம் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.