.

Pages

Friday, October 30, 2015

தற்போதைய தலைமையின் கீழ் செயல்பட அமீரக தமுமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு !

சென்னை தாம்பரத்தில் கடந்த 06-10-2015 அன்று நடந்த மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் புதிய மாநில தலைவராக பேராசிரியர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளராக அப்துல் சமது, பொருளாராக ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தமுமுக அமீரக செயற்குழு கூட்டம் அதிரை அப்துல் ஹாதி தலைமையில் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் தற்போதைய தமுமுக மற்றும் மமக தலைமையின் கீழ் அமீரக அனைத்து மண்டலங்களும் செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இயக்கத்தினுள் ஒற்றுமையை ஏற்படுத்த முயல்வது என்று தீர்மானம் செய்யப்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்தில் அமீரக மண்டல தமுமுக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
 

4 comments:

  1. 19 வருட இயக்கம் மன்னா போச் செத்த பாம்பை அடிக்க வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. கருத்து சொல்வதேன்றால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைக்க வேண்டாம் சகோ.ஜியா. நம்மலுடைய கருத்து மற்றவர்களை பாதிக்காத அளவுக்கு அதை பதிய வேண்டடும்.

      Delete
  2. /மேலும் இயக்கத்தினுள் ஒற்றுமையை ஏற்படுத்த முயல்வது என்று தீர்மானம் செய்யப்பட்டது//

    ஒற்றுமை ஏற்படாவிட்டால் அதிரை அப்துல் ஹாதி போன்றர்கள் இந்த இயக்கத்தை விட்டு வெளியேறுவது சிறந்தது!

    ReplyDelete
  3. வரக்கூடிய காலங்களிலாவது கடந்த காலங்களில் செய்த தவறுகளை ம.ம.க.வின் தலைவர்கள் மீளாய்வு செய்து,எதிர்காலங்களில் நல்ல ஒரு அரசியல் கட்சியாக பயணிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பõர்ப்பாகும். கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் இளைய தலைமுறைக்கு வழிவிடவும், அவர்கள் வழி தவறி செல்லும் போது,அதை சரி செய்யும் அளவுக்கு மனப்பக்குவத்தையும் பெற வேண்டும். ம.ம.க.விடத்தில் அது இல்லாததும் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகின்றது. ம.ம.க.வின் முழக்கமான “மண்டிய இருள் கிளிக்கும் மக்களின் எழுச்சி, மாற்று அரசியலுக்கான மாபெரும் புரட்சி” என்ற முழக்கத்தோடு மீண்டும் அரசியலில் பயணிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.