மருத்துவரின் அறிவுரையின் பேரில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இரத்த பரிசோதனைக்காக அதிரையில் இயங்கும் தனியார் இரத்த பரிசோதனை நிலையங்களை அணுகுவதுண்டு. வெறுங்குடலோடு இரத்தம் செலுத்த வேண்டும் என்பதால் அதிகாலை நேரங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில் அதிரை கடற்கரைத்தெருவை சேர்ந்த முகம்மது இக்பால், மருத்துவரின் அறிவுரையில் பேரில் இரத்த பரிசோதனையில் தனது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அறிந்து கொள்வதற்காக அதிரையில் இயங்கும் தனியார் இரத்த பரிசோதனை நிலையத்திற்கு சென்று இரத்த பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவில் கொலஸ்ட்ரால் அளவு வழக்கத்திற்கு மாற்றமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தவர், அதிரையில் இயங்கும் மற்றொரு இரத்த பரிசோதனை நிலையம் சென்று அங்கு இரத்தம் வழங்கினார். பரிசோதனை முடிவில் முதலாவதாக எடுத்துக்கொண்ட இரத்த பரிசோதனை நிலைய முடிவிற்கும் தற்போது எடுத்துக்கொண்ட பரிசோதனை முடிவிற்கும் மாற்றம் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர் மூன்றாவது முறையாக அதிரையில் இயங்கும் வேறொரு தனியார் இரத்த பரிசோதனை நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட பரிசோதனையில் முடிவில் முதல் மற்றும் இரண்டாவதாக எடுத்துக்கொண்ட பரிசோதனை முடிவிற்கு மாற்றமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அதிரையில் இயங்கும் மூன்று தனியார் இரத்த நிலையங்களில் இரத்த பரிசோதனை எடுத்துக்கொண்ட முகம்மது இக்பால் நம்மிடம் வருத்தத்துடன் கூறியதாவது...
மருத்துவர் அறிவுரையின் பேரில் எனது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் - ஆயில் அளவை அறிந்துகொள்ள அதிரையில் இயங்கும் தனியார் இரத்த பரிசோதனை நிலையத்திற்கு சென்றேன். அங்கு செய்து கொண்ட பரிசோதனையில் கொலஸ்ட்ரால் ஆயில் அளவின் முடிவு மாற்றமாக வந்தது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இவற்றை உறுதிப்படுத்திக் கொள்ள மற்றொரு பரிசோதனை நிலையத்திற்கு சென்றேன். அங்கும் பரிசோதனை முடிவு மாற்றமாக இருந்தது. மூன்றாவது முறையாக வேறொரு பரிசோதனை நிலையத்திற்கு சென்றேன். பரிசோதனை முடிவு முதல் மற்றும் இரண்டாவது பரிசோதனை நிலையங்களின் முடிவிற்கு மாற்றமாக இருந்தது எனக்கு பெரும் அதிர்ச்சியளித்தது.
தினமும் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இரத்த பரிசோதனைக்காக இங்குள்ள இரத்த பரிசோதனை நிலையங்களுக்கு வந்து செல்கின்றனர். இங்கு மேற்கொள்ளபப்டும் உறுதிப்படுத்தபடாத இரத்த பரிசோதனை முடிவுகளால் ஏராளமான பின்விளைவுகளை நோயாளிகள் சந்திக்க நேரிடும் என்பதால், பொதுமக்கள் நலன் கருதி இதுதொடர்பாக தமிழக முதல்வர், முதன்மைச் செயலாளர், சுகாதரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட, வட்டார சுகாதார துறை அதிகாரிகளிடம் ஆதாரங்களுடன் புகார் அளிக்க முடிவு செய்துள்ளேன்' என்றார்.
புகார் குறித்து அதிரையில் இரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வரும் திரு.பாலு நம்மிடம் கூறியதாவது...
உடலில் ஒவ்வொரு நிமிடமும் மாற்றும் ஏற்படும். ஒரே நேரத்தில் ஒருவரின் உடலில் இரத்தம் எடுத்து வெவ்வேறு பரிசோதனை நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளும் போது முடிவுகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். மாறாக ஒரு இடத்தில் பரிசோதனை மேற்கொண்ட பிறகு மற்றொரு இடத்தில் காலதாமதத்தோடு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளும் போது அல்லது உணவு உட்கொண்ட பிறகு இரத்த பரிசோதனை மேற்கொண்டாலோ இதன் முடிவுகள் சற்று மாறுபட்டதாக இருக்கும்' என்றார்.
முதலாவதாக பரிசோதனை நிலையத்தில் எடுத்துக்கொண்ட இரத்த பரிசோதனையின் முடிவு:
இரண்டாவதாக பரிசோதனை நிலையத்தில் எடுத்துக்கொண்ட இரத்த பரிசோதனையின் முடிவு:
மூன்றவதாக பரிசோதனை நிலையத்தில் எடுத்துக்கொண்ட இரத்த பரிசோதனையின் முடிவு:
Pls to do prompt action accordingly. ...... & punish them who made wrong.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete