இந்திய நாட்டின் பொதுப் பணியாளர்களாகிய நாம், நமது நடவடிக்கைகள் சார்ந்த எல்லாத் துறைகளிலும் நேர்மையும் ஒளிவு மறைவற்ற தன்மையும் இடம் பெறுவதற்கு, தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்று இதனால் உளமார உறுதி கூறுவோம்.
ஊழலை அறவே ஒழித்திட நாம் வாழ்வில் இடையாறாது முயல்வோம் எனவும் உறுதி கூறுவோம்.
நாம் விழிப்புடன் நமது அமைப்பின் முன்னேற்றம் மற்றும் நற்பெயருக்காக பணியாற்றுவோம்.
ஒன்றுபட்டு நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வாயிலாக, நமது அரசுக்குப் பெருமை சேர்ப்பதுடன் நமது நாட்டு மக்களுக்கு உயர் நெறிகளின் அடிப்படையிலான சேவைகள் புரிவோம்.
எவ்வித அச்சமும் தயவுமின்றி நம் மனசாட்சி காட்டும் நெறியின்படி நமது கடமையை ஆற்றுவோம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுலவர் திரு.பெ.சந்திரசேகரன், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் (லஞ்ச ஒழிப்பு) திரு.ஜெ.ரெத்தினவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.கங்காதரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) திரு.கணேசன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், ஊழல் ஒழிப்பு உறுதிமொழி எடுத்த சில மணி நேரத்தில் 11,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய, துணை கலெக்டர் லஞ்ச பணத்துடன் கைது செய்யப்பட்டார் என்று செய்தி வந்தது.
ReplyDeleteஒவ்வொரு மனிதனும் லஞ்சத்திற்கு எதிராக குரல்கொடுத்தால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஒரு பயம் வரும் அந்த பயத்தை மூலதனமாக வைத்து லஞ்சத்தை ஒழித்துவிடலாம். லஞ்சம் வாங்குகிறர்கள என்று அரசு அதிகாரிகளை குறை கூறுவதைவிட லஞ்சம் கொடுக்கமாட்டோம் என்று ஒவ்வொரு குடிமகனும் உறுதிமொழி எடுத்தாலே இந்த லஞ்சப்பேயை ஒழிக்கலாம்.