.

Pages

Tuesday, October 27, 2015

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் 2015 26.10.2015 முதல் 31.10.2015 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. நேற்று காலை 11.00 மணியளவில்  ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்திய நாட்டின் பொதுப் பணியாளர்களாகிய நாம், நமது நடவடிக்கைகள் சார்ந்த எல்லாத் துறைகளிலும் நேர்மையும் ஒளிவு மறைவற்ற தன்மையும் இடம் பெறுவதற்கு, தொடர்ந்து அயராது பாடுபடுவோம் என்று இதனால் உளமார உறுதி கூறுவோம்.

ஊழலை அறவே ஒழித்திட நாம் வாழ்வில் இடையாறாது முயல்வோம் எனவும் உறுதி கூறுவோம்.

நாம் விழிப்புடன் நமது அமைப்பின் முன்னேற்றம் மற்றும் நற்பெயருக்காக பணியாற்றுவோம்.

ஒன்றுபட்டு நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வாயிலாக, நமது அரசுக்குப் பெருமை சேர்ப்பதுடன் நமது நாட்டு மக்களுக்கு உயர் நெறிகளின் அடிப்படையிலான சேவைகள் புரிவோம்.

எவ்வித அச்சமும் தயவுமின்றி நம் மனசாட்சி காட்டும் நெறியின்படி நமது கடமையை ஆற்றுவோம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுலவர் திரு.பெ.சந்திரசேகரன், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் (லஞ்ச ஒழிப்பு) திரு.ஜெ.ரெத்தினவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.கங்காதரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) திரு.கணேசன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள்,  பணியாளர்கள் பங்கேற்றனர்.

1 comment:

  1. கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், ஊழல் ஒழிப்பு உறுதிமொழி எடுத்த சில மணி நேரத்தில் 11,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய, துணை கலெக்டர் லஞ்ச பணத்துடன் கைது செய்யப்பட்டார் என்று செய்தி வந்தது.

    ஒவ்வொரு மனிதனும் லஞ்சத்திற்கு எதிராக குரல்கொடுத்தால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஒரு பயம் வரும் அந்த பயத்தை மூலதனமாக வைத்து லஞ்சத்தை ஒழித்துவிடலாம். லஞ்சம் வாங்குகிறர்கள என்று அரசு அதிகாரிகளை குறை கூறுவதைவிட லஞ்சம் கொடுக்கமாட்டோம் என்று ஒவ்வொரு குடிமகனும் உறுதிமொழி எடுத்தாலே இந்த லஞ்சப்பேயை ஒழிக்கலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.