முன்னதாக தகவலறிந்த கல்லூரி பேராசிரியர், பள்ளி முதல்வர் - ஆசிரியர் பெருமக்கள் பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து சென்று பலத்த காயங்கள் அடைந்த இரண்டு மாணவர்களுக்கும் தேவையான உதவிகளை உடனிருந்து செய்துகொடுத்தனர். சிகிச்சை முடிந்து மாணவர்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் வரை இராமநாதபுரம் மருத்துவமனையில் முகாமிட்டு இருந்தனர்.
இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொண்ட அனைத்து மாணவர்களும் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதும், இவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் இல்லாததும் தெரியவந்துள்ளது. பயணம் மேற்கொண்ட மீதமுள்ள மாணவர்களின் நலன் கருதி, ஓட்டிவந்த இருசக்கர வாகனங்கள் பேராசிரியரால் பறிமுதல் செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் மாற்று வாகனத்தில் பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சுற்றுலா சென்ற மாணவர்கள் அனைவரும் தாங்கள் படித்து வரும் பள்ளி மற்றும் பெற்றோர் ஆகியோரின் அனுமதியின்றி தன்னிச்சையாக இருசக்கர வாகனங்களில் சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊருக்கு சுற்றுலா சென்றது தெரியவந்துள்ளது.
பள்ளி மாணவர்கள் வாகன விபத்துகளில் சிக்குவதை தடுக்கும் நோக்கில் பள்ளி மாணவர்கள்-பெற்றோர்கள் ஆகியோர் பங்கு பெரும் 'வாகன விபத்து தடுப்பு விழிப்புணர்வு' நிகழ்ச்சிகளை அந்தந்த பள்ளிகளின் சார்பில் அல்லது ஊரில் இயங்கும் அனைத்து பள்ளிகளின் சார்பில் ட்ராஃபிக் போலீசார், பேராசிரியர்கள் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்து அவ்வப்போது நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என அதிரைவாழ் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தனைக்கும் காரணம் அவர்களின் பெற்றோர்கள்தான்.கண்டிப்பு இல்லாத வளர்ப்பும்,சிறுவயதிலேயே அவர்களுக்கு இருசக்கரவாகனத்தை வாங்கிகொடுப்பதும் முக்கியகாரணம்.
ReplyDeleteஇத்தனைக்கும் காரணம் அவர்களின் பெற்றோர்கள்தான்.கண்டிப்பு இல்லாத வளர்ப்பும்,சிறுவயதிலேயே அவர்களுக்கு இருசக்கரவாகனத்தை வாங்கிகொடுப்பதும் முக்கியகாரணம்.
ReplyDeleteகாசு இருக்கிற திமிரு அதான் ஊரு சுத்த சொல்லுது. கேட்டால் எங்க அப்பன் துபையில் சம்பாதிக்கிறாரு என்று சொல்லுவான். பாவம் அவர் அங்கே என்னா பண்ணுறாரு என்று இந்த நாதாரிக்கு தெரியாது அவன் ஆத்தா காரிக்கும் தெரியாது தெரிந்து இருந்தால் காசை கொடுத்து ஊரு சுத்த அனுப்பி இருப்பாளா. பட்டால் தான் புத்தி வரும். இனியாவது திருந்துங்க.
ReplyDelete