இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகர் அருகில் சித்ரா என்ற ஏரியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது.
இந்நிலையில் திடீரென ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் செத்து மிதக்க தொடங்கின. சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாகவும் ஆக்ஸிஜன் இல்லாததன் காரணமாகவுமே மீன்கள் செத்து மிதப்பதாக தகவல் பரவி வருகின்றன. இதனால் அவைகளை அப்புறப்படுத்தும் வேளையில் மீனவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருன்றனர்.
இந்நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்கள் ஏரியில் இறந்து மிதந்தது அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Source: Dailymail
தகவல் கிடைத்தது
ReplyDelete