.

Pages

Thursday, December 31, 2015

அமீரகத்தில் எதிகாத் ரயில் நிறுவனம் நடத்திய போட்டியில் தமிழக மாணவருக்கு பரிசு !

எதிகாத் ரயில் நிறுவனம் நடத்திய போட்டியில் தமிழக மாணவருக்கு  பரிசு வழங்கப்பட்டது.

அமீரகத்தை இணைக்கும் வகையில் எதிகாத் ரயில் நிறுவனம் சிறப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கலைப் போட்டிகளை நடத்தியது. இந்த போட்டியில் சார்ஜாவில் உள்ள அவர் ஓன் ஆங்கிலப் பள்ளியில் பயின்று வருகிறார். இவர் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தை சேர்ந்த மாணவர் ஹுமைத் அபுபக்கருக்கு மூன்றாம் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எதிகாத் ரயில் நிறுவன அதிகாரி சான்றிதழையும், ஆப்பிள் ஐ பேடையும் பரிசாக வழங்கினார்.

இவர் ஏற்கனவே கல்வியிலும், பொதுசேவையிலும் சிறப்பாக இருந்து வருவதற்காக துபாய் அரசின் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் விருது, மின்சாரம் மற்றும் தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தியதற்காக சார்ஜா சஸ்டெய்னபிலிட்டி விருது, சார்ஜா சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விருது, சார்ஜா அரசின் கல்வி விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். கிரீன் குளோப் என்ற அமைப்பினை ஏற்படுத்தி கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட விழிப்புணர்வு பணிகளை இவர் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாணவர்களிடம் நிதியினை திரட்டி உதவி செய்துள்ளார்.

இவரது தந்தை அபுபக்கர் எதிசலாத் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தாய் யாஸ்மின் அபுபக்கர் மற்றும் சுட்டியான இரண்டு இளைய சகோதரர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.