.

Pages

Thursday, December 17, 2015

மின்சாரத்தை பயன்படுத்தி நீரை சேமிக்க உறுதியேற்க வேண்டும்: மின் சிக்கன விழாவில் மாவட்ட ஆட்சியர் தகவல் !

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வினோத் மஹாலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மின் சிக்கன வார விழா மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மின் சிக்கனத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
ஒரு பொருள் இயங்கிட உயிர்  வேண்டும்.   அது போல் உயிர் போன்றது மின்சாரம்.  மின் சிக்கனம் குறித்து அக்கறை அனைவருக்கும் வேண்டும்.

சோலார் விளக்குகளை பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை சிக்கனப்படுத்தலாம்.  மின்துறையில் மின் சிக்கனத்தில் நுகர்வோரின் பங்களிப்பு அவசியமானதாகும்.

மின்சாரத்தை பயன்படுத்தி நீரை சேமிப்போம். குப்பைகளை குறைப்போம் என்ற உறுதியினை பொது மக்கள் அனைவரும் ஏற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மின் பகிர்மான தலைமைப் பொறியாளர் குமாரசாமி ராஜா, மேற்பார்வை பொறியாளர்கள் பாலசுப்ரமணியன், சௌந்தரராசன், மோகனரங்கன், செயற்பொறியாளர் (பொது) செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர்கள் எஸ்.சம்பத், பேராசிரியர் முனைவர் என்.விஜயசுந்தரி, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  மேற்பார்வை பொறியாளர் அருள்மொழி வரவேற்றார்.  செயற்பொறியாளர் டி.என்.சங்கரன் நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.