.

Pages

Tuesday, December 15, 2015

அதிரையில் திடீர் பனிப்பொழிவு !

அதிராம்பட்டினம், டிசம்பர் 15,
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இந்நிலையில் அதிகாலையில் இந்த பகுதிகளில் திடீரென கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. காலை 7.30 மணி வரை நீடித்த இந்த பனிப்பொழிவால் அதிராம்பட்டினம் ஈசிஆர் நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மப்ளர், சுவெட்டர் அணிந்தபடி சென்றனர். இந்த சாலைகளில் வாக்கிங் செல்வோர் வழக்கத்தை வீட குறைவாகவே காணப்பட்டனர்.

இதுகுறித்து அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி கூறுகையில், 'இந்த பகுதியில் தொடர் மழை பெய்து வந்த நிலையில் திடீர் பனிப்பொழிவு காலநிலை மாற்றத்திற்கான அறிகுறியாகவே உள்ளது' என்றார்.

பனிப்பொழிவின் போது அதிராம்பட்டினம் பகுதியில் எடுத்த படங்கள்.
 
 
 
 
 
 
 
 
 

1 comment:

  1. தற்போது, சென்னை உட்பட, 20 மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை கொட்டித் தீர்த்தது. 12 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது, திடீரென ஊரில் பனிப்பொழிவு காணப்படுவதால் ECR ரோட்டுபக்கம்போவதை தவிர்த்துவிடுங்கள்; ஆயி போரதையல்லாம் பிறகு பார்த்துக்கோங்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.