.

Pages

Tuesday, December 15, 2015

வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் பண மோசடி !

அதிரை அடுத்துள்ள பேராவூரணியில் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ. 5 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது.


அதிரை அடுத்துள்ள பேராவூரணி பொன்காடு பகுதியைச் சேர்ந்தவர் கே.காதர் மஸ்தான் (63). ஓய்வு பெற்ற சாலை ஆய்வாளரான இவர் அப்பகுதியிலுள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ளார்.

இந்நிலையில் இவரை கடந்த சனிக்கிழமை மர்ம நபர் ஒருவர் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு, அவர் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் வங்கியின் மேலாளர் பேசுகிறேன் எனக் கூறியுள்ளார். மேலும் தங்களது ஏடிஎம் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும். அட்டையில் உள்ள எண்ணை கூறுங்கள் எனக் கேட்டுள்ளார். இதனை நம்பிய காதர்மஸ்தான் ஏடிஎம் அட்டையின் எண்ணைத் தெரிவித்துள்ளார்.

சற்று நேரத்தில் இவரது செல்லிடப்பேசிக்கு வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 5 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த காதர்மஸ்தான் உடனடியாக மும்பையில் உள்ள வங்கியின் தலைமையகத்துக்கு தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கை முடக்குமாறு கூறிவிட்டார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்குச் சென்று விவரம் கேட்டதற்கு, அதுபோன்று வங்கியில் இருந்து யாரும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை என விளக்கம் தெரிவித்தனர். மேலும் இது போன்ற அழைப்புகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தினர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.