பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் பெய்த தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தொகையை உடனடியாக வழங்கோ கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாய சங்க மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி மற்றும் விவசாய தொழிற்சங்க மதுக்கூர் ஒன்றிய செயலாளர் ரெத்தினம் தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் கூடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய சங்க பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் சோமசுந்தரம், அதன் செயலாளர் பாலசுப்ரமணியம், மதுக்கூர் சங்க தலைவர் முருகேசன், செயலாளர் வேதாசலம், விவசாய தொழிற்சங்க பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேலு, சிபிஎம் நகரசெயலாளர் கந்தசாமி, அதன் ஒன்றிய செயலாளர் செல்வம், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் காசிநாதன், ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை பற்றி விளக்கஉரையாற்றினர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்த கோரிக்கையான்து: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நெல் பயிருக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாயும், இடிந்த வீடுகளுக்கு 25 ஆயரம் ரூபாயும், பாதி சேதமடைந்த வீடுகளுக்கு 15 ஆயிரம் ரூபாயும், நீண்ட காலத்திற்கு முன் கட்டி சேதமடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புது வீடுகள் கட்டித்தர வேண்டும், பாதிப்பு அடைந்த ஓட்டு வீடுகளுக்கு 35 ஆயரம் ரூபாய் வழங்கவேண்டும், பயிர் இன்ஸ்யூரன்ஸ் காலத்தை ஜனவரி 15ம் தேதிவரை நீட்டிக்க வேண்டும், 100 நாள் வேலையில் ஈடுபட்ட தொழிலாளர்களின் சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தினை 200 நாள் வேலையாக மாற்றி நாள் ஒன்றிற்கு 300 ரூபாய் சம்பளம் தர வேண்டும், பட்டுக்கோட்டை சுற்றியுள்ள ஏரி, குளங்களை தூர்வாரி, அதன் ஆக்கிரமிப்புகளை சரிசெய்து வடிகால் வாய்க்கால்களை ஒழுங்கு படுத்த வேண்டும், அனைத்துபகுதி சாலைகளையும் போர்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும், விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், ரேசன் கடைகளில் மேலும் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை
சமீபத்தில் பெய்த தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தொகையை உடனடியாக வழங்கோ கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாய சங்க மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி மற்றும் விவசாய தொழிற்சங்க மதுக்கூர் ஒன்றிய செயலாளர் ரெத்தினம் தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் கூடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய சங்க பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் சோமசுந்தரம், அதன் செயலாளர் பாலசுப்ரமணியம், மதுக்கூர் சங்க தலைவர் முருகேசன், செயலாளர் வேதாசலம், விவசாய தொழிற்சங்க பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் தேவதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேலு, சிபிஎம் நகரசெயலாளர் கந்தசாமி, அதன் ஒன்றிய செயலாளர் செல்வம், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் காசிநாதன், ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை பற்றி விளக்கஉரையாற்றினர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்த கோரிக்கையான்து: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நெல் பயிருக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாயும், இடிந்த வீடுகளுக்கு 25 ஆயரம் ரூபாயும், பாதி சேதமடைந்த வீடுகளுக்கு 15 ஆயிரம் ரூபாயும், நீண்ட காலத்திற்கு முன் கட்டி சேதமடைந்த தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புது வீடுகள் கட்டித்தர வேண்டும், பாதிப்பு அடைந்த ஓட்டு வீடுகளுக்கு 35 ஆயரம் ரூபாய் வழங்கவேண்டும், பயிர் இன்ஸ்யூரன்ஸ் காலத்தை ஜனவரி 15ம் தேதிவரை நீட்டிக்க வேண்டும், 100 நாள் வேலையில் ஈடுபட்ட தொழிலாளர்களின் சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தினை 200 நாள் வேலையாக மாற்றி நாள் ஒன்றிற்கு 300 ரூபாய் சம்பளம் தர வேண்டும், பட்டுக்கோட்டை சுற்றியுள்ள ஏரி, குளங்களை தூர்வாரி, அதன் ஆக்கிரமிப்புகளை சரிசெய்து வடிகால் வாய்க்கால்களை ஒழுங்கு படுத்த வேண்டும், அனைத்துபகுதி சாலைகளையும் போர்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும், விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், ரேசன் கடைகளில் மேலும் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.