.

Pages

Thursday, December 31, 2015

அதிரை பகுதியின் விவசாய நிலங்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகள் !

அதிராம்பட்டினம், டிசம்பர் 31
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து நாசப்படுத்தி விடுகின்றன.அதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிரை பகுதியில் அடர்ந்த அலையாத்தி காடுகள் உள்ளன. இக்காட்டில் நரி, காட்டுப்பன்றி, முயல், காட்டு பூனை போன்ற வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டி முடுக்குக்காடு, கரிசைக்காடு, வள்ளிக்கொல்லைக் காடு கருங்குளம், மஞ்சவயல் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி நிலங்கள் உள்ளன. இதில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாற்றாங்கால் வயல்களில் கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றை தின்பதற்காக இரவு நேரங்களில் வனப்பகுதியிலிருந்து வரும் காட்டு பன்றிகள் வயல்களை பள்ளம் பள்ளமாக தோண்டி நாசப்படுத்தி விடுவதால் விவசாயிகள் பெரும் பாதிப்படைகின்றனர். வயல் பகுதிக்கு காட்டு பன்றிகள் புகாமல் தடுக்க வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.