நிகழ்ச்சிக்கு கல்லூரி முன்னாள் மாணவர் வழக்கறிஞர் அசோக் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரியின் கணினி அறிவியல் முன்னாள் துறை தலைவர் என்.ஏ சாகுல்ஹமீது, காதிர் முகைதீன் கல்லூரி கணினி அறிவியல் துறை தலைவர் என். ஜெயவீரன், பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் லெனின், பேராசிரியர் சேக் அப்துல் காதர், அலுவலக பணியாளர் ரவி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களை பற்றி அறிமுகத்தையும், தற்போது தாங்கள் செய்துவரும் பணிகள் பற்றியும், கல்லூரி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகள் குறித்து பேசி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தனர்.
முன்னதாக கல்லூரி முன்னாள் மாணவர் பகுருதீன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் முன்னாள் மாணவர்கள் முருகானந்தம், சுரேஷ், செல்வம், செந்தில் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சி முடிவில் முன்னாள் மாணவர் செய்யது புஹாரி நன்றி கூறினார்.
25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் மாணவர்கள் பரஸ்பரம் நலம் விசாரிப்புடன் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கல்லூரி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் அசைபோட்டனர். இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுவாழ் மாணவர்கள் அனைவரும் ஒரே யூனிபார்ஃமில் ( வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை அணிந்து ) நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சியை இனி வருடந்தோறும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதே முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் ஒருமித்த கருத்தாகவும், விருப்பமாகவும் இருந்தது.
பழைய மாணவர்களின் சந்திப்பு என்பது மகிழ்ச்சியான தருணம். அவரவர் தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து இருப்பார்கள். தங்களை உருவாக்கிய இந்த கல்லூரிக்கு உங்களின் வழிகாட்டுதலையும், உதவிகளையும் தொடர்ந்து வழங்க வழிவகை செய்யவேண்டும்.
ReplyDeleteஅன்புடன்
என்.ஷஃபாத்