.

Pages

Friday, December 25, 2015

காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக கணினி அறிவியல் பாடப்பிரிவு தொடங்கியது. வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில் முதல் பேட்ஜில் ( 1987 - 1990 ஆம் ஆண்டு ) கணினி அறிவியல் பாடப் பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்களின் நெஞ்சம் நெகிழும் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி இன்று காலை காதிர் முகைதீன் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முன்னாள் மாணவர் வழக்கறிஞர் அசோக் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரியின் கணினி அறிவியல் முன்னாள் துறை தலைவர் என்.ஏ சாகுல்ஹமீது, காதிர் முகைதீன் கல்லூரி கணினி அறிவியல் துறை தலைவர் என். ஜெயவீரன், பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் லெனின், பேராசிரியர் சேக் அப்துல் காதர், அலுவலக பணியாளர் ரவி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களை பற்றி அறிமுகத்தையும், தற்போது தாங்கள் செய்துவரும் பணிகள் பற்றியும், கல்லூரி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகள் குறித்து பேசி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தனர்.

முன்னதாக கல்லூரி முன்னாள் மாணவர் பகுருதீன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் முன்னாள் மாணவர்கள் முருகானந்தம், சுரேஷ், செல்வம், செந்தில் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சி முடிவில் முன்னாள் மாணவர் செய்யது புஹாரி நன்றி கூறினார்.

25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் மாணவர்கள் பரஸ்பரம் நலம் விசாரிப்புடன் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கல்லூரி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் அசைபோட்டனர். இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுவாழ் மாணவர்கள் அனைவரும் ஒரே யூனிபார்ஃமில் ( வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை அணிந்து ) நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியை இனி வருடந்தோறும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதே முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் ஒருமித்த கருத்தாகவும், விருப்பமாகவும் இருந்தது.
 
 

1 comment:

  1. பழைய மாணவர்களின் சந்திப்பு என்பது மகிழ்ச்சியான தருணம். அவரவர் தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து இருப்பார்கள். தங்களை உருவாக்கிய இந்த கல்லூரிக்கு உங்களின் வழிகாட்டுதலையும், உதவிகளையும் தொடர்ந்து வழங்க வழிவகை செய்யவேண்டும்.

    அன்புடன்
    என்.ஷஃபாத்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.