.

Pages

Sunday, December 20, 2015

தூய்மையை வலியுறுத்தி திடக் கழிவு மேலாண்மை விளக்க பயிற்சி வகுப்பு !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் தூய்மை தஞ்சை வலியுறுத்தி விழிப்புணர்வு திடக்கழிவு மேலாண்மை விளக்க பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இப்பயிற்சி வகுப்பில் வேலூர் சீனிவாசன் அவர்கள் குப்பைகளை கையாளும் விதம் குறித்தும் தூய்மையாக சுற்றுச்சூழல் பராமரிப்பு குறித்தும் பட விளக்கத்துடன் பயிற்சி வகுப்பினை நடத்தினார்.

பசுமை, தூய்மை, சுகாதாரமான தஞ்சையை மேம்படுத்திட உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள், பொது மக்கள் அனைவரும் ஒத்தழைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சீனிவாசன், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணை வேந்தர் நல்.ராமச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் பேரூராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டார்கள்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.