.

Pages

Friday, December 18, 2015

பிலால் நகர் வெள்ள தடுப்பு நடவடிக்கை: செடியன் குளம் நீர் நிலை வாய்க்கால் அளவீடு !

கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்துவந்த தொடர் கன மழையால் பிலால் நகர் அருகில் அமைந்துள்ள செடியன் குளம் மற்றும் செய்னாங் குளம் ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்ந்தது.

இதையடுத்து செடியன் குளம் நீர் நிரம்பி அருகில் உள்ள தாழ்வான பகுதியாக உள்ள பிலால் நகர் குடியிருப்பு பகுதிகளில் வெளியேறி வந்தது. மேலும் செய்னாங் குளத்தின் தண்ணீரும் அதிரை பேரூராட்சி நிர்வாகத்தால் செடியன் குளம் வரை புதைக்கப்பட்ட ஒரு அடி குழாய் வழியாக வெளியேறி பிலால் நகர் குடியிருப்பு பகுதிகளில் வெளியேறி வந்தது. மேலும் அதிரை பேரூராட்சி 15 வது வார்டு குடியிருப்பு பகுதியின் கழிவு நீரும் சேருவதால் பிலால் நகர் பகுதியில் துர் நாற்றம் வீசி வந்தது. இதனால் பிலால் நகர் குடியிருப்புவாசிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

இதுதொடர்பாக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ராஜசேகர், தாசில்தார் சேதுராமன், அதிரை காவல் துறை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், பேரூராட்சி செயல் அலுவலர், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் மலை அய்யன், அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் மாலா முத்துகிருஷ்ணன், 15 வது வார்டு கவுன்சிலர் அப்துல் லத்திப் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அனைவரும் பிலால் நகர் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நீர் நிலை வாய்க்காலை முறையாக அளவீடு செய்து, அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அரசு அலுவலர்கள் அப்போது தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை செடியன் குளத்திலிருந்து வெளியேறும் நீர் நிலை வடிகால் வாய்க்கால் அளவீடு செய்யும் பணி நடந்தது. பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ராஜசேகர் உத்தரவின் பேரில் டிடிஎஸ் தங்கராசு, பட்டுக்கோட்டை பிர்கா சர்வேயர் செல்வகுமார், ஏரிபுறக்கரை கிராம நிர்வாக அலுவலர் அருண் மொழி, அதிராம்பட்டினம் கிராம நிர்வாக உதவியாளர் பத்மநாதன் ஏரிபுறக்கரை கிராம நிர்வாக உதவியாளர் பாலா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர்.

அப்போது ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன், தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை மைதீன், சமூக ஆர்வலர் முஹம்மது இப்ராஹீம், கவுன்சிலர் முஹம்மது ஷெரீப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.