அதிரை பேரூராட்சியின் பெருந்தலைவராக பொறுப்பில் இருப்பவர் எஸ்.ஹெச் அஸ்லம். இவரது குடும்ப திருமண விழா இன்று மாலை செக்கடி பள்ளியில் உலமாக்கள், மஹல்லா நிர்வாகிகள், குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் துளிகள்:
1. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமாகிய டி.ஆர் பாலு, திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் மற்றும் திமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
2. முன்னதாக வண்டிப்பேட்டையில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் சார்பில் டிஆர் பாலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. டிஆர் பாலுக்கு அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இதைதொடர்ந்து திமுகாவை சேர்ந்த ஏராளமானோர் சால்வை அணித்து வரவேற்றனர்.
3. விழா மேடையிலும், வண்டிப்பேட்டை வரவேற்பிலும் காயல்பட்டினம் குழுவினர் தப்ஸ் முழங்கினார்கள். இவை பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
4. வண்டிப்பேட்டையிலிருந்து 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுக கொடியுடன் இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து டிஆர் பாலுவை விழா மேடைக்கு அழைத்து வந்தனர்.
5. டிஆர் பாலுவின் வாகனத்தை பின் தொடர்ந்து திமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் வாகனங்களில் அணிவகுத்து வந்தனர்.
6. வண்டிப்பேட்டை முதல் திருமணம் நடைபெறும் செக்கடி பள்ளி பகுதி வரையிலான இருபுறமும் அமைக்கப்பட்ட கம்பங்களில் திமுக கொடிகள் பறக்க விடப்பட்டன.
7. அதிரை சேர்மனின் ஆதரவாளர்கள், நண்பர்கள் பலர் திருமண நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்தும், நிகழ்ச்சிக்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்று அதிரையின் பிரதான பகுதிகளில் ஆங்காங்கே பிரமாண்ட ப்ளக்ஸ் பேனர்கள் வைத்தனர். மேலும் அதிரை பகுதிகளில் ஆங்காங்கே ஒட்டப்பட்ட வால்போஸ்டர்களிலும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
8. வாகன நெருக்கடியை தவிர்க்க தனியார் செக்யூரிட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மேலும் இவர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் பணியையும் மேற்கொண்டனர்.
9. விழா குழுவினர் திமுக பேட்ஜ் அணிந்து களப்பணி ஆற்றினார்கள்.
10. செக்கடி பள்ளி வளாகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், ஒரு பகுதியினரை சாலையோரத்தில் போடப்பட்ட விழா மேடை பந்தலிலும், செக்கடி குளம் நடைமேடை பகுதியிலும் அமர வைக்கப்பட்டனர்.
11. திருமண விழா முடிந்தவுடன் செக்கடி பள்ளி அருகில் வெளியூர் மற்றும் உள்ளூர் பிரமுகர்களுக்கு பிரியாணி இலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் உடனிருந்து விருந்தாளிகளை கவனித்துக்கொண்டார்.
12. முன்னதாக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், உள்ளூர் - வெளியூர் மற்றும் வெளிநாடு நண்பர்களை வரவேற்று நன்றி தெரிவித்துக்கொண்டார்.
13. விழாவில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிரை அனைத்து மஹல்லா சங்கங்களின் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், அதிரை சுற்று வட்டார கிராமத்தினர், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, மதுக்கூர், மல்லிபட்டினம், புதுப்பட்டினம், செந்தலைபட்டினம், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வருகை தந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
விழாவின் துளிகள்:
1. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமாகிய டி.ஆர் பாலு, திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் மற்றும் திமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
2. முன்னதாக வண்டிப்பேட்டையில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் சார்பில் டிஆர் பாலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. டிஆர் பாலுக்கு அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இதைதொடர்ந்து திமுகாவை சேர்ந்த ஏராளமானோர் சால்வை அணித்து வரவேற்றனர்.
3. விழா மேடையிலும், வண்டிப்பேட்டை வரவேற்பிலும் காயல்பட்டினம் குழுவினர் தப்ஸ் முழங்கினார்கள். இவை பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
4. வண்டிப்பேட்டையிலிருந்து 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுக கொடியுடன் இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து டிஆர் பாலுவை விழா மேடைக்கு அழைத்து வந்தனர்.
5. டிஆர் பாலுவின் வாகனத்தை பின் தொடர்ந்து திமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் வாகனங்களில் அணிவகுத்து வந்தனர்.
6. வண்டிப்பேட்டை முதல் திருமணம் நடைபெறும் செக்கடி பள்ளி பகுதி வரையிலான இருபுறமும் அமைக்கப்பட்ட கம்பங்களில் திமுக கொடிகள் பறக்க விடப்பட்டன.
7. அதிரை சேர்மனின் ஆதரவாளர்கள், நண்பர்கள் பலர் திருமண நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்தும், நிகழ்ச்சிக்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்று அதிரையின் பிரதான பகுதிகளில் ஆங்காங்கே பிரமாண்ட ப்ளக்ஸ் பேனர்கள் வைத்தனர். மேலும் அதிரை பகுதிகளில் ஆங்காங்கே ஒட்டப்பட்ட வால்போஸ்டர்களிலும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
8. வாகன நெருக்கடியை தவிர்க்க தனியார் செக்யூரிட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மேலும் இவர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் பணியையும் மேற்கொண்டனர்.
9. விழா குழுவினர் திமுக பேட்ஜ் அணிந்து களப்பணி ஆற்றினார்கள்.
10. செக்கடி பள்ளி வளாகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், ஒரு பகுதியினரை சாலையோரத்தில் போடப்பட்ட விழா மேடை பந்தலிலும், செக்கடி குளம் நடைமேடை பகுதியிலும் அமர வைக்கப்பட்டனர்.
11. திருமண விழா முடிந்தவுடன் செக்கடி பள்ளி அருகில் வெளியூர் மற்றும் உள்ளூர் பிரமுகர்களுக்கு பிரியாணி இலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் உடனிருந்து விருந்தாளிகளை கவனித்துக்கொண்டார்.
12. முன்னதாக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த மஹல்லா நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், உள்ளூர் - வெளியூர் மற்றும் வெளிநாடு நண்பர்களை வரவேற்று நன்றி தெரிவித்துக்கொண்டார்.
13. விழாவில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிரை அனைத்து மஹல்லா சங்கங்களின் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், அதிரை சுற்று வட்டார கிராமத்தினர், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, மதுக்கூர், மல்லிபட்டினம், புதுப்பட்டினம், செந்தலைபட்டினம், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வருகை தந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.