.

Pages

Wednesday, December 23, 2015

ஏழை, பணக்காரர்களை பிரிக்கும் தடுப்பு சுவர்: சமூக ஆர்வலர் அதிருப்தி !

ஏழை மற்றும் பணக்காரர்களை பிரிக்கும் விதமாக பெரு நாட்டில் கட்டப்பட்டுள்ள சுவர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. இதன் தலைநகர் லைமாவில் உள்ள சான் ஜுவான் டி மிராஃபொலோரீஸ் (san juan de miraflores) மற்றும் சுர்க்கோ(surko) பகுதிகளை பிரிக்கும் விதமாக 10 அடி உயர சுவர் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.

பெருவின் பெர்லின் சுவர் என்று அழைக்கப்படும் இந்த சுவர் பணக்காரர்களையும், ஏழைகளையும் பிரிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது நாட்டின் பணக்கார பகுதிகளில் ஒன்றான லாஸ் காஸ்வரீன மற்றும் ஏழைகள் நிறைந்த விஸ்டா ஹெர்மோசாவையும் பிரிக்கும் விதமாக இந்த சுவர் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பணக்காரர்கள் வசிக்கும் பகுதியான லாஸ் காஸ்வரீனவில் உள்ள வீடுகளில் விஸ்டா ஹெர்மோசா பகுதியை சேர்ந்தவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடக்கூடும் என்ற பயத்தின் காரணமாக இந்த சுவர் எழுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்த செயல் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பலரும் இந்த சுவர் எழுப்பப்பட்டதற்காக தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாபெரும் பேரணியை நடத்தவுள்ளது சமூக வலைத்தளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலக அளவில் ஊதிய ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ள நாடுகளில் லத்தின் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Dailymail

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.