தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இந்நிலையில் அதிகாலையில் இந்த பகுதிகளில் திடீரென கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. காலை 7.30 மணி வரை நீடித்த இந்த பனிப்பொழிவால் அதிராம்பட்டினம் ஈசிஆர் நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மப்ளர், சுவெட்டர் அணிந்தபடி சென்றனர். இந்த சாலைகளில் வாக்கிங் செல்வோர் வழக்கத்தை வீட குறைவாகவே காணப்பட்டனர்.
இதுகுறித்து அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி கூறுகையில், 'இந்த பகுதியில் தொடர் மழை பெய்து வந்த நிலையில் திடீர் பனிப்பொழிவு காலநிலை மாற்றத்திற்கான அறிகுறியாகவே உள்ளது' என்றார்.
பனிப்பொழிவின் போது அதிராம்பட்டினம் பகுதியில் எடுத்த படங்கள்.
தற்போது, சென்னை உட்பட, 20 மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை கொட்டித் தீர்த்தது. 12 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது, திடீரென ஊரில் பனிப்பொழிவு காணப்படுவதால் ECR ரோட்டுபக்கம்போவதை தவிர்த்துவிடுங்கள்; ஆயி போரதையல்லாம் பிறகு பார்த்துக்கோங்க.
ReplyDelete