சவூதி அரேபியா ஜித்தாவில் இம்பாலா கார்டனில், கடந்த வெள்ளியன்று இந்தியன் சோசியல் ஃபாரம் சார்பில் குடும்ப நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழக எஸ்.டி.பி.ஐ தலைவர் தெஹல்கான் பாகவி கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளில் சிறந்த பங்காற்றும் பலருக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதன் ஒரு நிகழ்வாக அதிரையை சேர்ந்த ரஃபியா அஹமது அவர்களுக்கு சிறந்த தன்னலமற்ற சேவை செய்து வருகிறமைக்காக விருது வழங்கப் பட்டது.
மேலும் மறைந்த ஜித்தா தமிழ் சங்க தலைவர் அப்துல் மாலிக் அவர்களுக்கு சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டது. இதனை ரஃபியா அஹமது அவர்களிடமே வழங்கப் பட்டது.
நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த பலரும் குறிப்பாக பெரும்பாலான அதிரையர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.