அதிராம்பட்டினம் மே-06
சட்டமன்ற தேர்தலையொட்டி அதிரையில் துணை ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மே16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பொதுமக்கள் சட்டம் ஒழுங்கை கடைபிடித்து நடக்க வேண்டும் என்பதற்காக போலீஸ் சார்பில் பல்வேறு பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அதிரையில் சட்டமன்ற தேர்தலையொட்டி துணை ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு நிகழ்ச்சி அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை பகுதியில் தொடங்கி, சேர்மன் வாடி, பழஞ்செட்டித்தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, கடைத்தெரு, தக்வா பள்ளிவாசல், காலேஜ் முக்கம், ஈசிஆர் சாலை வழியாக பேருந்து நிலையம் வந்தடைந்தது. இறுதியாக அதிரை காவல் நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் தேர்தல் பாதுகாப்புக்கு வந்துள்ள 60 துணை ராணுவத்தினர் மற்றும் அதிராம்பட்டினம் போலீசார் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற தேர்தலையொட்டி அதிரையில் துணை ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மே16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பொதுமக்கள் சட்டம் ஒழுங்கை கடைபிடித்து நடக்க வேண்டும் என்பதற்காக போலீஸ் சார்பில் பல்வேறு பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அதிரையில் சட்டமன்ற தேர்தலையொட்டி துணை ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு நிகழ்ச்சி அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை பகுதியில் தொடங்கி, சேர்மன் வாடி, பழஞ்செட்டித்தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, கடைத்தெரு, தக்வா பள்ளிவாசல், காலேஜ் முக்கம், ஈசிஆர் சாலை வழியாக பேருந்து நிலையம் வந்தடைந்தது. இறுதியாக அதிரை காவல் நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் தேர்தல் பாதுகாப்புக்கு வந்துள்ள 60 துணை ராணுவத்தினர் மற்றும் அதிராம்பட்டினம் போலீசார் கலந்து கொண்டனர்.
*file Image
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.