.

Pages

Monday, May 9, 2016

அதிரை பேருந்து நிலையத்தில் ஜான் பாண்டியன் வாக்கு சேகரிப்பு !

அதிராம்பட்டினம் மே-09
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெ. விவேகானந்தனை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில தலைவர் பெ. ஜான் பாண்டியன் அவர்கள் அதிரை பேருந்து நிலையத்தில் இன்று பிற்பகல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்காளப் பெருமக்களே சிந்தித்து பாருங்கள் மாறி மாறி திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து தவிர ஏதாவது நன்மைகள் இந்த பகுதிகளில் கிடைத்திருக்கிறதா ? என்றால் இல்லை என்றே சொல்ல முடியும். தேர்தல் நேரத்தில் மட்டும் வீடு வீடாக உங்களை தேடி வருகிறார்கள். கொள்ளை அடித்த பணத்தை உங்களிடத்தில் கொடுத்து அதில் வாக்குகள் பெற்று சட்டமன்றத்தில் அடிமைகளாக அமர்ந்து இருக்கிறார்கள். அவர்களால் சுயமாக பேசமுடியுமா ? பேச முடியாது.

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் விவேகானந்தன் வெற்றி பெறுவாரானால், இவரால் தன்னிச்சையாக செயல்படமுடியும். செயல்பாடு மக்களுக்காக இருக்கும். யாருக்கும் அடிமை கிடையாது. உங்களின் பொன்னான வாக்கினை பானை சின்னத்தில் அள்ளித்தாருங்கள்' என்றார்.
 

1 comment:

  1. யோவ்.., 2 மாதத்திற்கு முன் என்ன சொன்னீர் .., அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், சத்துணவு, அங்கன்வாடி மைய ஊழியர்களின் கோரிக்கைளை தமிழக அரசு தீர்த்து வைத்துள்ளது. இதை வரவேற்கிறோம். பலதரப்பட்ட மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள ஜெயலலிதா, வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்று சொன்னது மறந்து போச்சா; கேட்ட 5 தொகுதி கொடுக்கலேன்னு விரக்தியில் திராவிட கட்சிமீது பாய்ச்சல் ஏன். . இவரு போகும் இடமெல்லாம் சாதி சண்டை நடக்கும் ஆனால் தேர்தல் நேரத்தில் இவரை ரிலீஸ் பண்ணிடுறாங்க ., தல சுத்துது .., ஒன்னும் செய்ய வேண்டாம் இடத்த காளிபன்னுங்க காத்து வரட்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.