.

Pages

Tuesday, May 10, 2016

அன்னை சத்யா விளையாட்டரங்கில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி !

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் ஏராளமான மாணவர்கள், மாணவியர்கள், அலுவலர்கள் வாக்காளர் உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

உறுதிமொழி விபரம் பின்வருமாறு :
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுடைய இந்தியக் குடிமகனாகிய நான்ää என் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் மாண்பையும் நிலைநிறுத்துவேன் என்றும், மேலும் இத்தேர்தலில் அச்சமின்றியும், பணமோ, பொருட்களோ பெறாமலும், எந்தவொரு தூண்டுதலுக்கும் உட்படாமலும் நேர்மையாக சிந்தித்து வாக்களிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன்.  தேர்தல் விதிமீறல்கள் குறித்த எந்த செயல் பற்றியும் நான் அறிய வந்தால், அதனை தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடைமுறைக்கு உட்படுத்துவேன் என்று உறுதி ஏற்கிறேன்

என்ற உறுதிமொழியை மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி. தஞ்சாவ10ர் மாவட்டத்திலுள்ள 8 சட்ட மன்றத் தொகுதிகளிலும் நேர்மையாக வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி, வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.  ஓவ்வொரு தொகுதியிலும் சுமார் 1 இலட்சம் வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்கிறார்கள்.

அந்தந்த வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடிக்குட்பட்ட வாக்காளர்களுடன் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகளும், அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு தொண்டு நிறுவனங்கள், அலுவலகங்களில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் இன்று மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, இந்திய செஞ்சிலுவை சங்கத் தலைவர் எஸ்.ராஜமாணிக்கம், அரசு கேபிள் வட்டாட்சியர் மாலதி, தஞ்சாவ10ர் மாநகராட்சி செயற்பொறியாளர் சீனிவாசன், சுகாதார அலுவலர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உறுதிமொழி நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியர் திரு.தீபக் ஜேக்கப் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்கள் திரு.ஜெய்னுலூப்தீன் (பொது), திரு.கணேசன் (கணக்கு), திரு.ராம்சுந்தரம் (தேர்தல்),  அலுவலக மேலாளர் திரு.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.