முத்துப்பேட்டை நவ-29
திருவாரூர் முதல் காரைக்குடியிலான ரயில்வே சாலை அங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அணைத்து ரயில்வே சாலைகளையும் அகல ரயில்வே பாதைகளாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில் முக்கிய வழிப்பாட்டு தளங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களை இணைத்து உருவாக்கப்பட்ட இந்த ரயில் சாலையை மட்டும் அகல ரயில்வே பாதையாக மாற்றுவதில் ரயில்வேதுறை காலதாமதம் படுத்தி வந்தது.
இந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 650 கோடிகளுக்கு மேலாக நிதி ஒதிக்கீடு செய்து திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான சாதாரண ரயில்வே சாலையை அகல ரயில்வே சாலையாக மாற்றி அமைக்க முடிவு செய்தனர். இதனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சென்று வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. பணி துவங்கி மிகவும் ஆமைவேகத்தில் நடந்து வந்ததால்.. பணி நிறைவு பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் இப்பகுதி மக்கள் ரயில் வசதிகள் இல்லாததால் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர். பல இடங்களில் பொதுமக்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதனையடுத்து நடந்து வந்த ரயில் பாதை பணிகளை சென்று ஆண்டு முதல் ரயில்வே நிர்வாகம் பணிகளை துரித படுத்தியது. அதன் வகையில் காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான அகல ரயில்பாதை பணிகள் 80 சதவிதம் நிறைவு பெற்றது. இந்தநிலையில் மீதம் உள்ள பட்டுக்கோட்டை முதல் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக திருவாரூர் வரையிலான அகல ரயில் பாதை பணிகளை இந்தாண்டு தொடக்கத்தில் தீவீரமாக நடந்தது வந்தது.
தற்பொழுது பெரும்பாலான ரயில்வே பாலங்கள் பணிகள் முடிந்து விட்ட நிலையில் ரயில் தண்டவாளங்கள் அமைக்க பூமி மட்டத்தை சுமார் ஆறு அடி வரை உயர்த்தி கப்பி மணல்கள் நிரப்பும் பணிகள் முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவீரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் இந்த பணிகளை பார்வையிடுவதற்க்காக பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்திருந்த தென்னக ரயில்வேயின் தலைமை நிர்வாக அலுவலர் சுதாகர் ராவ், தலைமை பொறியாளர் காளிமுத்து, உதவி தலைமை பொறியாளர் விஜயக்குமார் ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள், முத்துப்பேட்டை பகுதிகளில் நடந்து வரும் அகல ரயில் பாதை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் ஜாம்புவான்னோடை சென்ற அதிகாரிகள் முத்துப்பேட்டை ரயில்வே போராட்டக்குழு தலைவர் எஸ்எஸ். பக்கர் அலி சாஹீப்பை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் ரயில்வே போராட்டக்குழு சார்பில் முத்துப்பேட்டை ரயில்வே நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்டது. இப்பகுதியில் உலக புகழ்பெற்ற ஜாம்புவான்னோடை தர்கா, தில்லைவிளாகம் ராமர்கோவில் உள்ளிட்ட அணைத்து மதத்தினரின் வழிப்பாட்டு தளங்கள் மற்றும் லகூன் மற்றும் பல்வேறு சுற்றுலா நிறைந்த பகுதியாகவும், அதிகளவில் மக்கள் தொகை கொண்ட பகுதியாகவும் உள்ளதால் இந்த ரயில்வே நிலையத்தை எந்தவகையிலும் தரம் குறைக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே உயரதிகள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து தென்னக ரயில்வேயின் தலைமை நிர்வாக அலுவலர் சுதாகர் ராவ் கூறுகையில்:
திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான அகல ரயில்வே பாதை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதலில் காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான பணிகள் 80 சதவிகிதம் முடிந்து விட்ட நிலையில் தற்பொழுது திருவாரூர் முதல் பட்டுக்கோட்டை வரையிலான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. தற்பொழுது திருவாரூர் முதல் பட்டுக்கோட்டை வரை உள்ள பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம்.. இந்த பணியை அடுத்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்' என்றார்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை
திருவாரூர் முதல் காரைக்குடியிலான ரயில்வே சாலை அங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அணைத்து ரயில்வே சாலைகளையும் அகல ரயில்வே பாதைகளாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில் முக்கிய வழிப்பாட்டு தளங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களை இணைத்து உருவாக்கப்பட்ட இந்த ரயில் சாலையை மட்டும் அகல ரயில்வே பாதையாக மாற்றுவதில் ரயில்வேதுறை காலதாமதம் படுத்தி வந்தது.
இந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 650 கோடிகளுக்கு மேலாக நிதி ஒதிக்கீடு செய்து திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான சாதாரண ரயில்வே சாலையை அகல ரயில்வே சாலையாக மாற்றி அமைக்க முடிவு செய்தனர். இதனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சென்று வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. பணி துவங்கி மிகவும் ஆமைவேகத்தில் நடந்து வந்ததால்.. பணி நிறைவு பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் இப்பகுதி மக்கள் ரயில் வசதிகள் இல்லாததால் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர். பல இடங்களில் பொதுமக்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதனையடுத்து நடந்து வந்த ரயில் பாதை பணிகளை சென்று ஆண்டு முதல் ரயில்வே நிர்வாகம் பணிகளை துரித படுத்தியது. அதன் வகையில் காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான அகல ரயில்பாதை பணிகள் 80 சதவிதம் நிறைவு பெற்றது. இந்தநிலையில் மீதம் உள்ள பட்டுக்கோட்டை முதல் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக திருவாரூர் வரையிலான அகல ரயில் பாதை பணிகளை இந்தாண்டு தொடக்கத்தில் தீவீரமாக நடந்தது வந்தது.
தற்பொழுது பெரும்பாலான ரயில்வே பாலங்கள் பணிகள் முடிந்து விட்ட நிலையில் ரயில் தண்டவாளங்கள் அமைக்க பூமி மட்டத்தை சுமார் ஆறு அடி வரை உயர்த்தி கப்பி மணல்கள் நிரப்பும் பணிகள் முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவீரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் இந்த பணிகளை பார்வையிடுவதற்க்காக பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்திருந்த தென்னக ரயில்வேயின் தலைமை நிர்வாக அலுவலர் சுதாகர் ராவ், தலைமை பொறியாளர் காளிமுத்து, உதவி தலைமை பொறியாளர் விஜயக்குமார் ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள், முத்துப்பேட்டை பகுதிகளில் நடந்து வரும் அகல ரயில் பாதை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் ஜாம்புவான்னோடை சென்ற அதிகாரிகள் முத்துப்பேட்டை ரயில்வே போராட்டக்குழு தலைவர் எஸ்எஸ். பக்கர் அலி சாஹீப்பை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் ரயில்வே போராட்டக்குழு சார்பில் முத்துப்பேட்டை ரயில்வே நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்டது. இப்பகுதியில் உலக புகழ்பெற்ற ஜாம்புவான்னோடை தர்கா, தில்லைவிளாகம் ராமர்கோவில் உள்ளிட்ட அணைத்து மதத்தினரின் வழிப்பாட்டு தளங்கள் மற்றும் லகூன் மற்றும் பல்வேறு சுற்றுலா நிறைந்த பகுதியாகவும், அதிகளவில் மக்கள் தொகை கொண்ட பகுதியாகவும் உள்ளதால் இந்த ரயில்வே நிலையத்தை எந்தவகையிலும் தரம் குறைக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே உயரதிகள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து தென்னக ரயில்வேயின் தலைமை நிர்வாக அலுவலர் சுதாகர் ராவ் கூறுகையில்:
திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான அகல ரயில்வே பாதை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதலில் காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான பணிகள் 80 சதவிகிதம் முடிந்து விட்ட நிலையில் தற்பொழுது திருவாரூர் முதல் பட்டுக்கோட்டை வரையிலான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. தற்பொழுது திருவாரூர் முதல் பட்டுக்கோட்டை வரை உள்ள பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம்.. இந்த பணியை அடுத்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்' என்றார்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.