.

Pages

Friday, November 18, 2016

சென்னை பாரிமுனை வங்கி கட்டிடத்தில் தீ விபத்து !

சென்னை பாரிமுனையில் தனியார் வங்கிகள் இயங்கி வந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் தீ பிடித்தது. கட்டிடத்தில் சிக்கியிருந்தவர்களில் 4 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை பாரிமுனை ஜஹாங்கீர் சாலையில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தீ பிடித்தது. 4 மாடிகள் கொண்ட இந்தக் கட்டிடத்தில், யெஸ் பேங்க், பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ், கத்தோலிக்க சிரியன் வங்கி, கோட்டக் மகேந்திரா, ஆர்பிஎல் ஆகிய 5 வங்கிகள் உள்ளன.

இந்நிலையில், இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. தண்ணீர் லாரிகள், 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன. வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். வங்கியின் மேல் தளத்தில் சிக்கியிருப்பவர்களை கிரேன் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர்.

ஜெனரேட்டரில் ஏற்பட்ட தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியதால் விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்றார்.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து நிகழ்ந்த இடம் முழுக்க கரும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.

மக்கள் கூட்டமாக கூடி தீயணைப்பு பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தடுப்பு வேலிகள் அமைத்து தடுக்கப்பட்டுள்ளது.

நன்றி: தி இந்து தமிழ்
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.